அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள்

அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள் என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வெளிவிவகாரம், … Read more

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடு

நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் என்பனவற்றை கொள்வனவு செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலையங்களில் இவ்வாறான பொருட்கள் கணிசமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே மக்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். “சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக தனிநபர் ஒருவர் ஒரே … Read more

விசேட சலுகை விலையில் லங்கா சதொச தண்ணீர் போத்தல்கள்

அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களுக்கு லங்கா சதொச தண்ணீர் போத்தல்களை விசேட சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் ஒன்றை மீள ஒப்படைக்கும் போது ஏற்கனவே அறவிடப்பட்ட 10 ரூபா மீள செலுத்தப்படும். இதற்கமைவாக 19 ரூபாவுக்கு 500 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தலை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை லங்கா … Read more

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் மீண்டும் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் அனைத்து கோவிட் நோயாளிகளும் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் ஆபத்தான நோய் அல்ல என தவறான கருத்து உள்ளதாகவும் ஆபத்தான நிலைக்குள்ளான நோயாளிகளும் உள்ளனர். ஆபத்துக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் கோவிட் … Read more

இந்தியப் பிரதமரின் வடபகுதி கரிசனை! பலாலியில் களமிறங்கவும் திட்டம்: செய்திகளின் தொகுப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடி இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு செல்ல திட்டமிடுவதான செய்திகள் வெளிவந்துள்ளன. பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் குறித்து இந்தியத்தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.  இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது … Read more

50 மில்லியன் ரூபா செலவில் பத்தரைக்கட்டை பிரதேசத்திற்கு குடிநீர் திட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தரைக்கட்டை கிராமத்திற்கு குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நேற்று (14)  திங்கட்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. இந்த திட்டத்தை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தன் ஆரம்பித்துவைத்துள்ளார். அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 150 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், இதற்காக சுமார் 50 மில்லியன் ரூபா நிதி முதற்கட்டமாக … Read more

மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

மருத்துவ பணிப்பாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பதாவது நாளாகவும் மருத்துவ பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது ஏழு கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சாதகமான பதிலை அளித்த போதிலும் உறுதி மொழி எதனையும் வழங்கவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறெனினும், இன்றைய தினம் காலை 9 மணிக்கு மீண்டும் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். … Read more

Expert Panel Discussion on “ Achieving Low Carbon Development Targets in the Power Sector”

Expert Panel Discussion on “ Achieving Low Carbon Development Targets in the Power Sector” The Centre for Banking Studies (CBS) of the Central Bank of Sri Lanka (CBSL) has made arrangements to conduct above captioned webinar on 17th February 2022. Considering the prevailing situation in the country, the CBS has arranged this forum as a web-based forum on Thursday, 17th February … Read more

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி உத்தரவு

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எந்தவொரு நபருக்கும் தாம் விரும்புவது போன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள். ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் … Read more