கோட்டாபய கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு வரவேண்டாம்! அமைச்சருக்கு சென்ற பகிரங்க அறிவித்தல்

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசளை பிரச்சினையால் விவசாயிகள் அமைச்சர் மீது கடும் எதிர்ப்பை கொண்டுள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி இருக்கும் மேடையில் கமத்தொழில் அமைச்சருக்கு எதிராக ஹூ சத்தமிட்டு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டால், அது அந்தளவுக்கு பொருத்தமாக இருக்காது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் பிரதான பேச்சாளர்களில் … Read more

28 வயது பெண் நடன கலைஞர் எடுத்த தவறான முடிவு! மீட்கப்பட்ட சடலம்

கொழும்புக்கு அருகில் உள்ள மகரகமை நகரில் உள்ள ஆடம்பர வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடொன்றில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்த பெண் நடன கலைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அபகஸ்வெவ ஹிரியால, நரணகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணின் உடலை களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக ஒருவர் நேற்றிரவு தொலைபேசியில் அறிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபர் அங்கு இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து உடலை … Read more

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மற்றொரு கடுமையான பிரேரணையுடன் பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பிரேரணையை இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கான பொறுப்புக் கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் கொழும்பு இராஜதந்திர மட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. பிரித்தானியா கொண்டுவரவுள்ள இந்தப் புதிய பிரேரணைக்கு ஐரோப்பிய … Read more

இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ள வரப்பிரசாதங்கள்! வர்த்தக அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் புத்தாண்டு காலத்திலிருந்து நுகர்வோருக்கு ஒரு கிலோ சம்பா அரிசி 125 ரூபாவிற்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலி, உனவடுனவில்  வைத்து  இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,  பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு விசேட நிவாரணங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

வெளிநாடொன்றில் ஏற்பட்ட விபத்தில் 3 இலங்கையர்கள் பலி

சவுதி அரேபியாவின், தமாம் நகரத்தில் இடம்பெற்ற எரிவாயு விபத்தில் 3 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரின் சடலம் நேற்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த ஏனைய இரு இலங்கையர்கள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த போது, கடந்த ஜனவரி 27ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. … Read more

சமுர்த்தி பயனாளர்களா நீங்கள்! உங்களுக்கு ஓர் நற்செய்தி

சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்பு நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மேலும் அவர் தெரிவிக்கையில்,   நாட்டில் 17 இலட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் சமுர்தி கொடுப்பனவை பெறுகின்றன. இவர்களுக்காக சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை 28 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் வழங்கப்பட்ட 3,500 ரூபா மேலதிக கொடுப்பனவு பெற்ற குடும்பங்களுக்கான மேலதிக 4, … Read more

பல மணிநேர தொடர் மின் துண்டிப்புக்கு தயாராகுங்கள்! பொதுமக்களுக்கான அறிவிப்பு வெளியானது

நாட்டில் 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்காக எச்சரிக்கை காணப்படுவதாக மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   Source link

மீண்டும் அச்சுறுத்தவுள்ள அடுத்த வகை கோவிட் வைரஸ் குறித்து அச்சம் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்

நியூயோர்க்கில் எலிகள் உடலில் ஒரு வகை கோவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வகை மரபணு மாற்ற கோவிட் வைரஸ் எலிகளிடமிருந்து பரவலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விலங்குகளிடம் கோவிட் காணப்படுவது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாகும். காரணம், அது விலங்குகளிடம் பரவுவது கவனிக்கப்படாமலே விடப்பட்டு, பின்னர் புதிய ஒரு வகை கோவிட் வைரஸாக மனிதனுக்குப் பரவும் அபாயம் உள்ளது. ஆய்வாளர்கள் எலிகளின் அச்சத்தை ஆய்வுக்குட்படுத்திய போது, அவற்றில் கோவிட் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சாக்கடையிலிருந்து … Read more

தென்னிலங்கையை கட்டுப்படுத்தும் மந்திரவாதி பெண்ணால் சர்ச்சையில் சிக்கிய இராணுவ உயர் அதிகாரி

தென்னிலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரவாதி பெண்ணொருவரை கொழும்புக்கு அழைத்து வந்தமை தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அநுராதபுரம் ஞானக்கா எனப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சோதிட ஆலோசனை சொல்லும் மந்திரவாதி பெண்ணை கொழும்பிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்ட ஞானக்கா பிரபல ஹோட்டல் ஒன்றில் உள்ள அழகுக்கலை நிலையத்திற்கு சென்றிருந்தார். 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான அழகு கலை நிலையத்திற்கே அவர் … Read more

கொழும்பில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம் – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை வாழைப்பழங்கள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மெனிங் சந்தையில் இடம்பெறும் இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் எந்தவொரு அதிகாரியும் இதுவரையிலும் அவதானம் செலுத்த வில்லை என தெரியவந்துள்ளது. முதலில் பச்சை நிறத்தில் காணப்படும் வாழைத்தார்களுக்கு மிகவும் ஆபத்தான இரசாயனத்தை தெளித்து அதனை தொங்க விடுவதாகவும் இரண்டு மணித்தியாலங்களில் வாழைக்காய் வாழைப்பழமாக மாறிவிடுவதாகவும் … Read more