உலகளவில் கொரோனா பாதிப்பு – 40 கோடியாக அதிகரிப்பு

உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 40.37 கோடியை கடந்துள்ளது.. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 37 இலட்சத்து 405 ஆக … Read more

30 வருடங்களின் பின்னர் இலங்கையில் பெற்றோரை தேடும் ஐரோப்பா வாழ் மகன்

கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கை மகன் தற்போது இலங்கை பெற்றோரை தேடி வருகின்றார். நோர்வே நாட்டிற்கு சென்று அங்கு வளர்ந்த பின்னர் அதே நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 31 வயதான இளைஞன் நாட்டில் எங்காவது இருக்கும் தனது பெற்றோரை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இளைஞன் தன்னை பெற்ற தாயின் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். அந்த தகவலுக்கமைய தனது தாய் பலங்கொடை வைத்தியசாலையில் பிறந்துள்ளதாகவும் தற்போது … Read more

கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் மட்டக்களப்பு விஜயம்

மட்டக்களப்புக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் வர்த்தகத்துறைக்கான ஆலோசகர் டேனியல் வூட் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பொருளாதார சமூகம் சர்ந்த பல விடயங்கள் விரிவாக ஆரயப்பட்டதுடன் எதிர்காலத்தில் கனேடிய அரசாங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.  

சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பறிபோன உயிர்

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் உயிரிழந்துள்ளார். மகாவலி அதிகார சபையில் கடமையாற்றும் காணி உத்தியோகத்தரான கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த பேதுருஹேவகே ரஞ்சித் என்ற 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். உயிரிழந்த காணி அதிகாரியின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகேவினால் நேற்று (09) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. சுகயீனம் காரணமாக … Read more

குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் திருத்தம்

குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would limit delays in law.) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (09) நீதித் துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதி அமைச்சர் … Read more

கடன்களை திரும்பிச் செலுத்த முடியாது திணறுகிறதா இலங்கை? உண்மை நிலவரம் என்ன?

இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,  இலங்கை கடன்களை மீளச் செலுத்த முடியாதவாறு முறிவடையக்கூடிய நிலையின் விளிம்பில் இருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். அவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் எவ்வித அடிப்படைகளும் அற்றவை. அதேவேளை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அனைத்துத் … Read more

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 பெப்ரவரி 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022பெப்ரவரி 10ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல … Read more

இலங்கையில் முட்டை விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம்

கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் குறிப்பிடுகிறார். அரிசி, சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதுடன் கால்நடை தீவன மூட்டை 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் எட்டு இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன் அந்த மாகாணத்தில் சுமார் 400,000 விவசாயிகள் … Read more

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் MATLAB மென்பொருளின் வளாக அளவிலான அனுமதிப்பத்திரத்தை செயல்படுத்துகிறது

ஜெனரல் சேர் ஜாேன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கற்கைக்கு உதவுவதற்கும், உயர்நிலை ஆராய்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட உருவகப்படுத்துதல்களை மேற்கொள்வதற்கும் உதவும் வகையில் MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் முழுமையான பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமத்தை தனதாக்கியுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக MATLAB மென்பொருள் வளாகம், குறித்த மென்பொருளின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் இலங்கையின் முதலாவது உயர்கல்வி நிறுவனாக திகழ்வதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. MATLAB மென்பொருள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு சமிக்ஞைகள் செயலாக்கம், … Read more

இலங்கையின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி 27 வயதில் காலமானார்

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி குருப்பு தனது 27ம் வயதில் காலமானார். கடந்த 2020ம் ஆண்டு ஓஷதிக்கு புற்று நோய் ஏற்பட்டதுடன் இரண்டாண்டுகளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி 2015ம் ஆண்டில் இலங்கை தேசிய பூபந்து அணியின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தார். கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ஓஷதி பூபந்து போட்டியில் மகளிர் பிரிபில் … Read more