பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற 'சார சங்ஹிதா' புலமை இலக்கிய நூல் வெளியீட்டு விழா

பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழா இன்று 08 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெறும். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கடந்த வருடம் பாராளுமன்ற ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலுக்கான கட்டுரைகள் கோரப்பட்டன. சட்டவாக்க செயற்பாடுகள், … Read more

பாராளுமன்ற அமர்வு இன்று

பாராளுமன்றத்தை இன்று (08) முதல் 11ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதிச் சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்று (07) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரையான பாராளுமன்ற அமர்வு தினங்களில் மாற்றம் செய்யப்படவில்லையென்பதுடன், 09ஆம், 10ஆம் திகதிகளில் பாராளுமன்ற அலுவல்கள் பின்வருமாறு … Read more

உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகி வரும் நிலையில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்றின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று இன்று நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 50 பேர் வரையில் அண்மையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பது … Read more

07.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

07.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்  

WhatsApp குழுவில் வந்த காணொளிகள்! – இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் சிறை தண்டனை

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்த இலங்கை நாட்டவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாகச் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் 25 காணொளிகளைத் தமது கைபேசியில் வைத்திருந்த 25 வயதான கொலம்பகே தனுஷ்கா சமாரா பெரேரா என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு இலங்கையரான ஹிண்டாகும்புரே ஷரிந்து தில்ஷன் ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக The Straits Times … Read more

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமானதொரு முற்போக்கான படியாகும்

பாராளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 43 வருடங்களின் பின்னர் அதில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுப்பதுடன், குறித்த சட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான உறுதியான பாதுகாப்பை வழங்கும் மிகவும் முற்போக்கான நடவடிக்கையாக அமையும். முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் … Read more

இலங்கையில் குறைந்த விலையில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்!

இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 1.2 மில்லியன் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் எனவும், 200சிசி திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 814 கிலோ எடையை சுமந்து … Read more

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு: நோயாளிகள் அசௌகரியத்தில்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(07) காலை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நோயாளிகள் கடும் அசௌகரியங்களைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க தாமதித்ததால் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள நேர்ந்ததாக அந்தத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கை எந்தவிதத்திலும் நியாயமானதல்ல என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க தலைவர் சங்கைக்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கோரிக்கைகளில் சிலவற்றுக்கு தீர்வு வழங்க ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாதியர் சார்ந்த பல கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை! – வெளியானது தகவல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அனைத்து எரிபொருள் விலைகளையும் ஒரு வாரத்திற்குள் அதிகரிக்கும் என கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விற்பனை நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விற்பனை நிலையங்களுக்கு படையெடுப்பார்கள். இதனால், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் நஷ்டம் தொடர்ந்து உயரும் என்றும், அதன் விளைவாக,எரிபொருள் விலை தவிர்க்க முடியாமல் உயரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க (ஜே.எஸ்.எஸ்) செயலாளர் ஆனந்த பாலித இதனை … Read more

சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை… அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ தலைமையில் புதிய குழு

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்கு வைத்தே, ஜனாதிபதி அவர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ அவர்களது தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும், ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்தார். சுங்கத் திணைக்களத்தின் … Read more