இலங்கையில் 10 நாட்களில் 222 கோவிட் மரணங்கள்

இலங்கையில் கடந்த 26ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையான 10 நாட்களுக்குள் 222 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 10 நாட்களில் 10,651 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் ஒமிக்ரோன் கோவிட் மாறுபாடின் தன்மைக்கமைய, சமூகத்தில் நோய் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறியுடைய கோவிட் நோயாளிகள் இருக்கலாம் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தயர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றாளர்கள் … Read more

இலங்கையில் 3 பேரின் உயிரை பறித்த Youtube வீடியோ

வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கான காரணம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மூவரும் சென்றுள்ளனர். மாத்தறையில் இருந்து வந்த 6 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் … Read more

திடீரென மயங்கி வீழ்ந்து இளைஞரொருவர் மரணம் (Photos)

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கரவெட்டி கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் எனும் தேசிய சேமிப்பு வங்கி காவல் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாகவுள்ள நுகவில் வயலில் தனது சகோதரருடன் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார். இந்நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் … Read more

13 ஆம் திருத்த சட்டம் தேவை தானா?

Courtesy: கட்டுரையாசிரியர் – தி. திபாகரன் இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சினை கிடையாது. தமிழர்களுடைய பிரச்சினை பொருளாதார பிரச்சினை மட்டும்தான். அதனை வருகின்ற புதிய அரசியல் யாப்பின் ஊடாக உறுதி செய்து பொருளாதாரப் பிரச்சினையை தீர்த்து விடுவோம்” என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். இதிலிருந்து இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது. அந்த அடிப்படையில் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தினால் இலங்கை … Read more

ஈழத்தமிழர்களுக்கு வெளிநாட்டு முகவர்களால் புதிய நெருக்கடி

எமது மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையிலே இருக்கின்ற உறவு சிதைந்து விடக்கூடாது, இது வெறுமனே தமிழக மீனவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், சூழலியலாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். தமிழக மீனவர்களுக்கும், எமது மீனவர்களுக்கும் இடையிலான உறவு கசந்து போகுமாக இருந்தால் நிச்சயமாக ஒட்டு மொத்த தமிழக உறவுகளையும் நாங்கள் பகைக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து … Read more

யாழ். மாவட்டத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மூவர் கைது

ஓட்டை உடைத்து வீடு புகுந்து வாளைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்கும் கும்பல் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் சிக்கியது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் இரவு வேளை வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைத் தாம் கொண்டு வந்த கூரிய வாளைகே காட்டி மிரட்டி மூன்றரைப் பவுண் நகையையும், சி.சி.ரி.வியையும் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பில் … Read more

வங்குரோத்து அடைந்து விட்ட பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கை மின்சார சபை உட்பட பல அரச நிறுவனங்கள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாத காரணத்தினால், கூட்டுத்தாபனம் வங்குரோத்து அடைந்து விட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை எதிர்காலத்தில் தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால்,அதற்கு எதிராக மிகப் பெரிய தொழிற்சங்க போராட்டத்தில் இறங்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். இணையத்தள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் … Read more

ஐரோப்பிய நாடொன்றிக்கு செல்ல முயற்சித்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலிக்கான போலி வதிவிட வீசாவைப் பயன்படுத்தி டோஹா ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே, குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் … Read more

அனைத்து குற்றங்களுக்கும் அருந்திகவே முன்னோடி:உடுவே தம்மாலோக்க தேரர்

ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர் என உடுவே தம்மாலோக்க (Uduwe Dammaloka Thero) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள், தவறுகள், அநீதிகள்,மோசமான சம்பவங்கள் போன்று இலங்கையில் எந்த மாவட்டத்திலும் நடப்பதில்லை. அருந்திக பெர்னாண்டோவே அனைத்து மோசமான குற்றவியல் சம்பவங்களுக்கும் முன்னோடி என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். … Read more

இரகசியமாக கூடிய எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள்

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல்வாதிகள் அண்மையில் மிக இரகசியமான முறையில் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக எதிர்வரும் 10 ஆம் திகதியும் இரகசிய பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. இந்த இரகசிய பேச்சுவார்த்தையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்கு செய்திருந்தாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் … Read more