வெளியானது வைபவ்வின் புதிய பட டீசர் குறித்த முக்கிய அப்டேட்…!

வைபவ்வின் ‘ பபூன் ’ படத்தின் டீசர் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருகிறார் வைபவ் . தற்போது காமெடி கதைக்களங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறது. அந்த வகையில் பாரி கே விஜய் இயக்கத்தில் ஆலம்பனா படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை அடுத்து ‘பபூன்’ என்ற புதிய படத்தில் வைபவ் நடித்து வருகிறார். தனது திருமண வாழ்க்கையை நிறைவு செய்வதாக டிவிட்டரில் பதிவிட்ட ரீமாசென்…! என்ன … Read more

மாறன் விமர்சனம்: டைம் டிராவல் செய்யவைக்கும் பழங்கால சினிமா… ஒரேயொரு கேள்விதான் தனுஷ், ஏன் இப்படி?

நேர்மையான ஊடகவியலாளரான மாறன், அவருக்கு எதிராக நடக்கும் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மாறன்’ படத்தின் ஒன்லைன். மாறன் விமர்சனம் மாறனின் தந்தை ஒரு நேர்மையான ஊடகவியலாளராக இருக்க, வழக்கம்போல் அவரை எதிரிகள் கொன்றுவிடுகிறார்கள். அதே திருநாளில்தான் சிறுவனாக இருக்கும் மாறனுக்கு தங்கை பிறக்கிறாள். அப்பாவின் மரணம் என்ற கலவரத்தின் இடையே தாய்க்குப் பிரசவ வலி வர, ‘வீல்’ என்னும் சத்தத்துடன் குழந்தை பிறக்கிறது. ஒட்டுமொத்த குடும்ப பாரமும் மாறன் … Read more

தேன் படம் டிவியில் ஒளிபரப்பாகிறது

கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் பாராட்டை பெற்ற படம் தேன். கணேஷ் விநாயகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்திலர் தருண் குமார் மற்றும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்னதி அருள்தாஸ் மற்றும் பவா லட்சுமணன் நடித்திருந்தார்கள். தேனீ வளர்ப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த, கல்வி கற்காத ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அவர் மீது இந்த சமுதாயம் சுமத்துகின்ற சுமைகளையும், பிரச்சனைகளையும் அவர் எப்படி எதிர்த்து போராடுகிறார் என்ற கருப்பொருளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இத்திரைப்படம் விமர்சன … Read more

ஏன் முறைக்கிறீங்க…. சமந்தாவை பாதுகாப்பாக அழைத்து சென்ற கிரிக்கெட் வீரர்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா . தற்போது பாலிவுட்டிலும் தடம் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். அதன் பிறகு சமந்தா, என்ன செய்கிறார் என்பதை உற்று கவனித்து வருகின்றனர் ரசிகர்கள். கணவரை பிரிந்த பிறகு தோழிகளுடன் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வருகிறார் சமந்தா. அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். Maaran … Read more

ராதேஷ்யாம் – முதல் நாள் வசூல் ரூ.79 கோடி என அறிவிப்பு

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படம் பிரபாஸின் முந்தைய பான்–இந்தியா படமான 'சாஹோ' படத்தின் வசூலை முறியடிக்கும் என பட வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், படம் காதல் படமாக மட்டுமே இருப்பதால் படத்திற்கான வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் படத்தைத் தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் அவர்களது சமூகவலைதளத்தில் படத்தின் முதல் நாள் … Read more

ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா… `பாகுபலி' பிரபாஸா இது?

காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில், ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள். என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ஒன்லைன். 1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று, அவரின் கை ரேகையை பார்த்து ‘நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்போகிறீர்கள்’ என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற ஆதித்யா. … Read more

பாலியல் குற்றங்களை தடுக்க இதுதான் சரியான வழி – நடிகை ரோகிணி சொன்ன அறிவுரை

பாலியல் குற்றங்களை தடுக்க பெண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் அனைத்தையும், ஆண் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில், எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் சார்பில், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அக்னி சிறகே’ என்ற தலைப்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் திரைப்பட நடிகை ரோகிணி பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “சமூகத்தில் பெண்கள் மீதான தவறான பார்வையின் … Read more

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் கட்டுகிறது கேரள அரசு

தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று புகழப்பட்ட அவர் கர்நாடக சங்கீதத்திற்குள் முடங்கி இருந்த திரைப்பாடல்களை வெகுஜன மக்களுக்கான இசையாக மாற்றியவர். தென்னிந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். தமிழ் இசை அமைப்பாளர் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் அறியப்பட்டாலும் அவர் ஒரு மலையாளி. கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர். தனது மண்ணின் மைந்தன் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் … Read more

தனது திருமண வாழ்க்கையை நிறைவு செய்வதாக டிவிட்டரில் பதிவிட்ட ரீமாசென்…! என்ன ஆச்சுனு தெரியலையே…?

தனது 10 ஆம் ஆண்டு திருமண நாளை நெருங்கி இருக்கிறார் ரீமா சென் : தமிழில் விஷால் அறிமுகமான ‘ செல்லமே ‘ படத்தில் அறிமுகமானவர் நடிகை ரீமா சென், 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார் ரீமா சென். உண்மையை சொல்லப் போனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ரீமா சென் மற்றும் … Read more