தனது திருமண வாழ்க்கையை நிறைவு செய்வதாக டிவிட்டரில் பதிவிட்ட ரீமாசென்…! என்ன ஆச்சுனு தெரியலையே…?

தனது 10 ஆம் ஆண்டு திருமண நாளை நெருங்கி இருக்கிறார் ரீமா சென் : தமிழில் விஷால் அறிமுகமான ‘ செல்லமே ‘ படத்தில் அறிமுகமானவர் நடிகை ரீமா சென், 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார் ரீமா சென். உண்மையை சொல்லப் போனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ரீமா சென் மற்றும் … Read more

”லைகாவிடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை விஷால் செலுத்தவேண்டும்” : நீதிமன்றம்

”லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும்” என்று நடிகர் விஷலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனிடமிருந்து பெற்ற ரூ. 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. அந்தத் தொகையை செலுத்தாமல் “வீரமே வாகை சூடும்” படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்கவும் கோரி லைகா வழக்கு தொடர்ந்திருந்தது. மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் … Read more

வலிமை படத்திற்கு எதிராக மெட்ரோ தயாரிப்பாளர் வழக்கு

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளிவந்த படம் வலிமை. கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் கதையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மெட்ரோ என்ற படத்தின் கதையும் ஒரே சாயலை கொண்டிருப்பதாக விமர்சனம் எழுந்தது. படம் வெளியாகி விட்ட நிலையில் வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் மெட்ரோ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் … Read more

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணும் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் லாக்கரில் வைக்கப்பட்டது. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியையும் நியமித்தது. நான் இருக்கேன்மா… முத்துமணி மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி! இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் … Read more

தனுஷ் காலை வாரிய இரண்டு கார்த்திக்குகள்…

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை மூன்று முறை பெற்றவர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்து இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்றவர் தனுஷ். 'ஆடுகளம், அசுரன்' ஆகிய படங்களின் மூலம் தனுஷின் இமேஜ் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரை விடவும் அதிகமாக உயர்ந்தது. நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, தயாரிப்பு என தன்னை பல விதங்களில் சினிமாவில் ஈடுபடுத்திக் கொள்பவர். ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு தமிழ்ப் படங்களும், … Read more

நடிகர் சங்க வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து துணை நடிகர்களான ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்தார். மேலும், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரையில் அரசு நியமித்த தனி அதிகாரியே சங்க நிர்வாகத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை … Read more

ஓடிடி-ல் வெளியாகியிருக்கும் ஈஸ்ட்மென் காலத்துப் படம்! – ‘மாறன்’ திரைப்பார்வை

தனுஷ் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் கூட்டணியில் தொடரி, பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகியிருக்கும் திரைப்படம் மாறன். இந்த முறை ‘ஹோம் தியேட்டரில்’. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேற்று(11 மார்ச்) மாலை 5 மணிக்கு வெளியாகியிருக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் துருவங்கள் 16, மாஃபியா படங்களின் இயக்குநரான கார்த்திக் நரேன். மாறனின் கதை டிரெயிலரிலே சொன்னதுதான். ஓர் அரசியல்வாதியின் ஊழலை வெளிக்கொணரும் நேர்மையான ஊடகவியலாளன் ஒருவனின் போராட்டமே படம். என்ன ஊழல், எந்த அரசியல்வாதி என்பதும் அதை மாறன் … Read more

ஒன்றாக இருப்பது கலை – ஏஆர்.ரஹ்மான்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது நாயகன் என அழைக்கப்படும் ரஹ்மான் உலக அளவிலும் புகழ் பெற்றவராக இருக்கிறார். தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டதில்லை. எப்போதவாது மகனுடன் இருக்கும் புகைப்படங்களையும், மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார். மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிடுவது அபூர்வம். இன்று தன்னுடைய 27வது திருமண நாளை முன்னிட்டு மனைவி சாய்ரா பானுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒன்றாக இருப்பது ஒரு கலை…எல்லாப் … Read more

பிரபல நடிகருன் இணையும் வாணிபோஜன்…! என்ன படம் தெரியுமா…?

பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ‘ ரேக்ளா ’ படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரபல நடன இயக்குனராக இருக்கு பிரபுதேவா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது ‘ வால்டர் ’ படத்தை இயக்கிய அன்பரசன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதையடுத்து பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷின் … Read more