திடீரென ஹேப்பியாக நன்றி சொன்ன ஐஸ்வர்யா… ஏன் தெரியுமா?

ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்ததில் இருந்து இருவர் குறித்தும் நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி வெளியான வண்ணம் உள்ளது. கணவரை பிரிந்து பிறகு வேறு வாழ்க்கையை தேர்வு செய்துள்ளார் ஐஸ்வர்யா . அக்ஷய்குமார் வீட்டில் நிகழ்ந்த மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்! சமந்தா செய்த அந்த காரியம்… அதிர்ச்சியில் வாயடைத்துப்போன மாஜி கணவரின் குடும்பம்! ஆல்பத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதனிடையே சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து வேலையில் கவனம் … Read more

இறுதி கட்டத்தில் வல்லான்

சுந்தர்.சி நாயகனாக நடித்து வரும் படம் வல்லான். விஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கிறார், மணி சேயோன் இயக்குகிறார். சுந்தர்.சியுடன் ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோரும் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். … Read more

Dhanush:தனுஷுக்கு எதிரான லதாவின் 3வது அஸ்திரமும் ஒர்க்அவுட்டாகிடுச்சு

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இரு வீட்டாரும் ஈடுபட்டுள்ளனர். முதலில் பார்க்கலாம் என்று சொன்ன ஐஸ்வர்யாவும், தனுஷும் தற்போது முடியாது என்கிறார்களாம். இருந்தாலும் தங்கள் முயற்சியை மட்டும் குடும்பத்தார் கைவிடவில்லையாம். இதற்கிடையே தனுஷின் கெரியரை அடிவாங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் லதா ரஜினிகாந்த் . தனக்கு தெரிந்த இயக்குநர்களை அணுகி தனுஷுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்றாராம். அதன் பிறகு தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தனுஷ் படங்களுக்கு பணம் கொடுக்கக் … Read more

'கேஜிஎஃப் 2’ மகளிர் தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட படக்குழு

மகளிர் தினத்தையொட்டி ‘கேஜிஎஃப் 2’ படத்தில் நடித்துள்ள நடிகைகளை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு. ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், இன்று மகளிர் தினத்தையொட்டி ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், அர்ச்சனா, ஈஸ்வரி ராவ் … Read more

'முதல் நாள் முதல் காட்சி' என்ற பெயரில் கட்டணக் கொள்ளை

கொரோனா காரணம், அதனால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை என கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகத்தில் அதிகமான குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால், விருப்பப்பட்டு வரும் மக்களுக்கும் அதிகமான கட்டணம், அதிகமான தின்பண்ட விலை, ஆன்லைன் பதிவுக் கட்டணம் என மக்களை அடுத்த முறை எட்டி கூட பார்க்க வைக்காத விதத்தில்தான் பல தியேட்டர்கள் உள்ளன. முன்னணி நடிகர்களின் படங்கள் வரும் போதெல்லாம் அதிகாலை காட்சி, காலை 8 மணி சிறப்பு காட்சி என சிறப்புக் காட்சிகளை … Read more

'வலிமை' படம் பார்க்க வந்த ஷாலினி அஜித்திடம் ரசிகர் கோரிக்கை: தீயாக பரவும் வீடியோ..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் … Read more

இரட்டைக் கதாபாத்திரங்களில் கார்த்தி: மைசூரில் ‘சர்தார்’ சண்டைக் காட்சி படமாக்கம்

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, முத்தையாவின் ‘விருமன்’ படங்களில் நடித்துவரும் நடிகர் கார்த்தி மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷிகண்ணா நடிக்கிறார். யூகி சேது, ரஜிஷா விஜயன், முரளி வர்மா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இரண்டு கார்த்திக்கும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. சென்னை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்பு … Read more

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா, வினய் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛எதற்கும் துணிந்தவன்'. மார்ச் 10ல் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. சூர்யாவின் முந்தைய இரண்டு படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பா.ம.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யாவின் முந்தைய படமான ஜெய் பீம் படம் பாராட்டை பெற்றாலும் அதில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக சர்ச்சையும் வெடித்தது. இதற்கு பா.ம.க.வினர் … Read more

பீஸ்ட் பட நடிகரின் அடாவடி… கைகலப்பில் முடிந்த சம்பவம்..!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட் . இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ நடித்துள்ளார். மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் டாம் சாக்கோ 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகிவரும் தல்லுமலா எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதெற்கெல்லாம் தனுஷ் தான் … Read more

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக்கூடாதென மிரட்டல்: தமுஎகச கண்டனம்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. முன்னணி நடிகர்களின் பங்களிப்புடன் வரும் 10-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை  திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டி வருவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.  2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்து விட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் … Read more