சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக்கூடாதென மிரட்டல்: தமுஎகச கண்டனம்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. முன்னணி நடிகர்களின் பங்களிப்புடன் வரும் 10-ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டி வருவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்து விட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் … Read more