ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் கடைசி மகன் அலெக்ஸ் பாண்டியன் மாற்றுத்திறனாளி. அவரைத் தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் அய்யாசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து பிழைப்புக்காகப் பசுமாடு வளர்த்து தொழில் செய்துவந்தார் சுந்தராம்பாள். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு  நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் இன்று தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் சார்பில்,  வேப்பூர் அருகே திருப்பெயரில்   நடைபெறும் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாட்டில் கலந்துகொள்கிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடலூரில் முகாமிட்டு உள்ளார். நேற்று   கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட … Read more

வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வருகின்றனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயிலமைத்து வழிபாடு செய்கிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த இவ்விடம் தமிழகத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் “ஐந்து குண்டு” என்ற ஐந்து … Read more

மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக துணை முதல்வர்

சென்னை தமிழக  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மும்மொழி கொள்கையை  ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு கடும்  எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என தமிழக அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது. ஆயினும் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மத்திய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதான் இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலை புகுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்., தமிழகம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 5 ஆயிரம் கோடி ரூபாயை … Read more

மத்திய அரசு மாணவர்களிடம் நிபந்தனை விதிக்கக் கூடாது : அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அர்சு மாணவர்களுகு நிபந்தனை  விதிக்கக்கூடாது எனக் கூறியுள்ளார். இன்று திருச்ச்சியில்  நடந்த செய்தியாளர்கள்  சந்திப்பில் தமிழக அமைச்சர் அன்பில்  மகேஷ், ” கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என தர்மேந்திர பிரதான் வலியுறுத்துகிறார். மத்திய அரசு தமிழக அரசை பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். கல்வி நிதி வழங்கபடாத விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தோழமை கட்சிகள், மக்கள் அனைவரும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இளைய … Read more

வரும் 25 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம்

சென்னை வரும் 25 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் நடத்த உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, “மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழகத்தில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம், … Read more

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது… சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக, கடந்த டிசம்பர் 3-ம் தேதி அமைச்சர் பொன்முடி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க இருவேல்பட்டு கிராமத்துக்கு நேரில் சென்றார். உடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, முன்னாள் … Read more

ஒரு இனத்தின் அடையாளம் தாய்மொழி : துணை முதல்வர் உதயநிதி

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு இனத்தின் அடையாளம் தாய்மொழி எனத் தெரிவித்துள்ளார். இன்று உலகெங்கும் தாய்மொழி தினம் விமரிசையாக  கொண்டாடப்படுகிறது/  இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம். தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் … Read more

`சிறகடிக்க ஆசை தமிழில் மட்டுமல்ல; இந்தியிலும்..!' – FICCI கருத்தரங்கில் விகடன் மேலாண் இயக்குநர்

சென்னையில் நடந்து வரும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கில் ‘பவர் ஆஃப் டிவி இன்‌ சவுத்’ என்ற தலைப்பில் விகடன்‌ குழும மேலாண் இயக்குநர் சீனிவாசன், ஜியோ ஸ்டார் தெற்கு மண்டல தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட பலர் பேசினர். விகடன் மேலாண் இயக்குநர் சீனிவாசன், “தொலைகாட்சி துறையில் கதை சொல்லல் என்பது மிக மிக முக்கியம். தென்னிந்திய தொலைகாட்சி பழைமைவாதத்தை கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் … Read more

ஆங்கிலமொழிக்கு ஆதரவு அளிக்கும் ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில மொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்/ மத்திய அரசு நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதாகவும். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதி எம்.பி. மற்றி, காங்கிரஸ்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொதுமக்களை சந்தித்து உரையாடினார். ராகுல் காந்தி தனது உரையில்: ”பட்டியலின, பழங்குடியின மற்றும் விளிம்பு நிலை மக்கள் ஆங்கிலம் … Read more