காஷ்மீர் பண்டிட்டை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி அதிரடியாக கொலை| The terrorist who shot Kashmiri Pandit was killed in action

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில், வங்கி காவலராக பணியாற்றிய பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவரை கொன்ற பயங்கரவாதி உட்பட இருவரை, பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் இருக்கும் அச்சன் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த ௨௬ம் தேதி தன் வீட்டுக்கு அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றபோது பயங்கரவாதியால் சுடப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு … Read more

திருட்டு பைக்கில் பயங்கர ஆயுதங்கள்; கொலைசெய்யச் சென்ற கும்பல் போலீஸில் சிக்கியது எப்படி?!

சென்னை, பெரியமேடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியான மூர் மார்க்கெட் சந்திப்பில், நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே சந்தேகத்துக்கிடமான வகையில்,  இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து, விசாரணை செய்தனர். அதில், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சீட்டில் 6 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. திடீரென அந்த 3 நபர்களும் ஓட முயற்சி செய்ய, போலீஸார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் … Read more

'நீங்கள் தகுதியானவர்' மெஸ்ஸியை வாழ்த்திய ஜாம்பவான் ரொனால்டோ! வைரலாகும் வீடியோ

FIFA-வின் சிறந்த விருது வழங்கும் விழாவில் பிரேசிலிய ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ (Ronaldo Nazario) லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) வாழ்த்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திங்கள்கிழமை மாலை பாரிஸில் நடந்த ஒரு விழாவில் மெஸ்ஸி இரண்டாவது முறையாக ஃபிஃபாவின் சிறந்த வீரர் (FIFA’s The Best Men’s Player) விருதை வென்றார். மெஸ்ஸியிடம் ரொனால்டோ நசாரியோ என்ன சொன்னார்? FIFA ரொனால்டோ நசாரியோ மெஸ்ஸியை கட்டிப்பிடித்து, “உலகக் கோப்பைக்கு வாழ்த்துகள், எவ்வளவு அழகாக … Read more

வெப்பத்தை சமாளிப்பது எப்படி? சுகாதார அமைச்சகம் விளக்கம்!| How to deal with the heat? Ministry of Health explanation!

புதுடில்லி, கோடையில் ஏற்படும் வெப்ப அலையை சமாளிப்பது குறித்த அறிவுறுத்தல்களை மத்திய சுகாதார அமைச்கம் வெளியிட்டுள்ளது. வழக்கமாக மார்ச் மாதத்திலிருந்து தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாத துவக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டும் சில மாநிலங்களில் பிப்ரவரியிலேயே கடும் வெயில் அடித்தது. இதன் காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடுத்து வரும் மாதங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை … Read more

“நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்..!" – ஐ.நா-வில் கைலாசா பிரதிநிதி பேச்சு

கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நித்யானந்தா, 2019-ல் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அதோடு, தப்பிச்சென்ற நித்யானந்தா, மத்திய அமெரிக்காவில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு `கைலாசா’ எனப் பெயரிட்டு தனி நாடாக அவர் நிர்வகித்துவருவதாக, பல்வேறு செய்திகள் பரவின. நித்யானந்தா இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், `United States of Kailasa’-வின் பிரதிநிதிகள் எனப் பெண்கள் பலர் கலந்துகொண்டது தற்போது … Read more

தொன்மையான 146 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க தமிழ்நாடு வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 146 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க தமிழ்நாடு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வல்லுனர்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணி துவங்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

"இங்கேதான் என் வாழ்க்கை தொடங்கியது!"- வான்கடே ஸ்டேடியத்தில் தன் சிலை அமைவது குறித்து சச்சின்

கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை தன் வசமாக்கிப் புகழ்பெற்ற நட்சத்திர வீரராக, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சச்சின். 1998ம் ஆண்டு 15வது வயதில் மகாராஷ்டிர மாநிலம், மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பித்த அவரது கிரிக்கெட் பயணம், அவரது 39வது வயதில் 2012ம் ஆண்டு அதே வான்கடே மைதானத்தில் கண்ணீருடன் விடைபெற்றது. வான்கடே மைதானம் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த சச்சின் வரும் ஏப்ரல் 24ம் தேதி தனது ஐம்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில் … Read more

மொட்டை அடித்து, கைகள் மற்றும் கால்களைச் சேர்த்துக் கட்டிய நிலையில் கைதிகள்! மாபெரும் சிறைச்சாலை திறப்பு

எல் சால்வடார் என்ற நாட்டில் மிகப் பிரமாண்டமான சிறையைத் திறந்ததோடு அதில் 40 ஆயிரம் கைதிகளை அடைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. அதிக அளவில் குற்றம் மத்திய அமெரிக்க நாடுகளிலே மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடாக எல் சால்வடார் என்ற நாடு பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை கிட்டதட்ட 6.9 மில்லியன் ஆகும். இதனிடையே இந்த நாட்டில் அதிக அளவில் குற்றங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி கேங் வார் நடக்கும் இந்த நாட்டில் கொலை … Read more

இந்தியாவில் வேலையிழப்பு ஏற்பட்டால் 25% பேரால் சம்பளமில்லாமல் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாது : ஆய்வில் தகவல்

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த சில மாதங்களில் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இதில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்று திடீர் வேலையிழப்பு ஏற்பட்டால் சாமானியர்களின் நிதி நிலைமை என்னவாக இருக்கும் என்று பினோலஜி வென்சர்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 59176 ரூபாய் சராசரி மாத வருமானமுள்ள 3 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் வேலையிழப்பு … Read more

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்..!!

டெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார். டெல்லியில் மார்ச் 1, 2ம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சீனா பங்கேற்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் கேங் மார்ச் 2ம் தேதி டெல்லி வருகிறார். 2019ல் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்ட பிறகு சீனாவின் உயர் மட்ட தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.