ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர்: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: மாநில அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என பல வழக்குகளில் தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்த கோரிக்கை வைத்தால் ஆளுநர் அதை ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் அனுமதி வழங்காதது குறித்த வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்பம் உதவும்: பிரதமர் மோடி| “Identify 10 Problems That Can Be Solved Using AI”: PM Modi

புதுடில்லி: ” 2047 ல் இந்தியா வளர்ந்த நாடு என்ற இலக்கை, தொழில்நுட்பம் உதவியுடன் அடைய முடியும்”, என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வாழ்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சிறு வணிகர்களின் பிரச்னைகளை குறைக்க வேண்டும் என விரும்புகிறோம். சிறுவணிகர்கள், தாங்கள் சந்திக்கும் தேவையற்ற பிரச்னைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுவரை 40 ஆயிரம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். நவீன டிஜிட்டல் … Read more

மெனு! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் அது. சரவணன்…, விடிகாலைத் துயில் எழுந்தான். குடில் கதவைத் திறந்தான். சீலீரென்று உள் நுழைந்த காற்றைச் சுவாசித்தான். வாசலில் வேப்ப மரம் படர்ந்து, செழித்து வளர்ந்து நின்றது. தாழ்ந்து நின்ற கிளையிலிதுந்து குச்சி உடைத்தான். பற்களால் கடித்துத், … Read more

ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்பிய நபர்… நாடுகடத்தப்படும் சூழலில் அவரே சிக்கியது அம்பலம்

அமெரிக்காவின் டெக்சாஸ் எல்லையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை திருப்பி அனுப்பிய அதிகாரி ஒருவர், தாமும் ஒரு ஆவணமற்ற புலம்பெயர் நபர் என்பதை உறுதி செய்யப்பட்டதில் அதிர்ந்து போயுள்ளார். அம்பலமாகியுள்ள பிண்ணனி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முற்படும் மக்களை கண்காணித்து வெளியேற்றும் பணியில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாகனங்களிலும் ஹெலிகொப்டர்களிலும், தற்போது ட்ரோன் மூலமாகவும் எல்லைகளில் அத்துமீறும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். @getty ரால் ரோட்ரிக்ஸ் என்பவர் அமெரிக்க கடற்படையின் ராணுவ பொலிஸ் படையில் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து! வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் அட்வான்சாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் 1ந்தேதி (நாளை) பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்றே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். நாளை மாலை, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் … Read more

சென்னை மாநகராட்சி பகுதியில் 2000 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் – ரூ.14லட்சம் அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் பிப்ரவரி.1-20 வரை 1,938 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ.14.16 லட்சம் அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி.

தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்| Tremendous growth in telecom sector: Ashwini Vaishnav is proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக, தொலைதொடர்பு துறை உருவாகி வருகிறது. இதனால் தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 10 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் தயாரிப்புக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது 99% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன. இதனால் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது பெரிய … Read more

தொடர் வீழ்ச்சிக்கு பின் மீளும் அதானி குழும பங்குகள் – வர்த்தகம் தொடங்கியது முதல் கிடுகிடு உயர்வு

டெல்லி, அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் கடந்த மாதம் 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் … Read more

“அரசு அமைப்புகளை கூட்டணி கட்சி போல ஆட்டுவிக்கிறது பாஜக" – சிசோடியா கைதுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!

டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக, ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் மீது பல மாதங்களாக பா.ஜ.க குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்த நீலையில், கடந்த வாரம் சி.பி.ஐ அவரைக் கைதுசெய்தது. முன்னதாக மணீஷ் சிசோடியாவிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, அவரின் பதில்கள் திருப்திகரமானதாக இல்லை எனக் கூறி வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தது. சிசோடியா இதன் காரணமாக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை, பல்வேறு தரப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், … Read more

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்தினர் உள்பட 14 பேருக்கு சம்மன்…

பாட்னா: நிலத்திற்கு பதிலாக அரசு பணி வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட 14பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 15ந்தேதி ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பீகாரைச்சேர்ந்த  ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே இவர் பீகார் மாநில முதல்வராகவும் … Read more