சென்னையில் கஞ்சா சாக்லேட் – கோவையில் போதை மாத்திரைகள் – ஊசிகள் நடமாட்டம்! இளைஞர்கள் கைது…
சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கட்டப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வந்தாலும் சென்னை உள்பட பல மாவட்ங்களில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் நடமாட்டம் பகிரங்கமாகவே நடைபெற்று வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில், சென்னையில் உள்ள பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுபோல, கோவையில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more