`நரிக்குறவர், குருவிக்காரர்… நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை!’ – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நரிக்குறவர், குருவிக்காரர், பலவேசம் கட்டுபவர், இன்னும் பிற அறியப்படாத, அறியப்படுத்தப்படாத எத்தனையோ பழங்குடி இனத்தவர்கள் இன்னும் கூட தங்களுக்கான அடையாளமாக சாதிச் சான்றிதழ் பெற போராடிவருவதைப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நாம் கண்டுவருகிறோம். இதன் காரணமாகப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எத்தனையோ முதல் தலைமுறை மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தும், மேற்படிப்பைத் தொடரமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுமட்டுமல்லாமல், இடஒதுக்கீட்டின் மூலம் தனக்கு கிடைக்கவேண்டிய உரிமையைக் கூட இவர்கள் இழக்க நேரிடுகிறது. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இப்படியான சூழ்நிலையை … Read more

உலகை அச்சுறுத்தும் ரஷ்யாவின் exoskeleton உடை: அதிர்ச்சியில் உறைந்து போன உக்ரைன்!

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்று வரும் உக்ரைன் போரில் இந்த உடைகள் பயன்படுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், இந்த கவச உடையானது எதிராளிகளுக்கு மிகப்பெரிய … Read more

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

சென்னை: பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜீலை மாதம், 2020-ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அகில பாரத வித்தியார்த்தி பரிசத் எனப்படும் ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் … Read more

வேளாண் பட்ஜெட் கண்துடைப்பு- எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்கள் பெருநஷ்டத்துக்கு ஆளானார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் வடகிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கொடுக்கிறோம் என்றார்கள். இன்று விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்தவுடன் அதை கொள்முதல் செய்வதில்லை. அதை திறந்த வெளியில் விவசாயிகள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். மழையால் … Read more

சென்னை மாதவரம் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!: அலறியடித்து ஓட்டம் பிடித்த ஒட்டுநர்..!!

சென்னை: சென்னை மாதவரம் அருகே ஆந்திரா நோக்கி சென்ற பழுதான காரின் எஞ்ஜின் பகுதியை திறக்க முற்பட்ட போது திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டுநர் உட்பட காரில் இருந்த 4 பேரும் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சாதனை: அமித்ஷா| Dinamalar

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் கிடைத்த மகத்தான வெற்றியே, நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சிஆர்பிஎப் அமைப்பின் எழுச்சி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளனர். தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும், ஜனநாயக நாட்டின் … Read more

மேற்கத்திய நாடுகளுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்தியா.. !

இந்தியாவின் சட்டப்பூர்வமான எரிபொருள் பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது என்று வெள்ளிக்கிழமை மத்திய அரசு மேற்கு நாடுகளைத் தாக்கி பேசியுள்ளது. கச்சா எண்ணெய் தேவையைச் சொந்த நாட்டின் உற்பத்தி வாயிலாகத் தீர்த்துக்கொள்ளும் நாடுகள் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி நாடுகள் கட்டுப்பாட்டுத்தப்பட்ட எண்ணெய் வர்த்தகம் குறித்துப் பிற நாடுகளுக்கு அறிவுரை கூறக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் … Read more

ஆன்லைனில் நடக்கும் PF ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம்; கலந்து கொள்வது எப்படி?

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உள்ள குறைகளைத் தீர்க்க வரும் மார்ச் 21-ம் தேதி ஆன்லைன் மூலமாக குறைதீர்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பென்ஷன் PF வட்டியை குறைத்த அரசு; Voluntary Provident Fund -ஐ தொடரலாமா? | How Will It Impact Employees? தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மக்கள் சந்திக்கும் குறைகளைத் தீர்ப்பதற்காக வருகிற மார்ச் 21-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள … Read more

உக்ரைன் ஆயுதங்களை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்!

ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் சண்டையிடுவதைத் தவிர்ப்பதற்காக தங்களைத் தாங்களே காலில் சுட்டுக்கொள்கிறார்கள் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக, ரஷ்ய வீரர்கள் உக்ரேனிய வெடிமருந்துகளைத் தேடுகின்றனர். அதன்முலம் காயம் ஏற்பட்டால், அவர்கள் சுயமாக காயப்படுத்திக் கொண்டதைப்போல் இல்லாமல் உள்ளூர் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெலாரஷ்ய ஊடகமான NEXTA, ரஷ்ய படையினரை இடைமறித்து அவர்களுடன் உரையாடியபோது, ரஷ்ய இராணுவ அதிகாரிகள் கூட சுயமாக தங்கள் காலில் சுட்டுக் கொண்டதாக ரஷ்ய சிப்பாய் ஒருவர் … Read more

50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ஒதுக்கீடு

சென்னை: 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாயும், 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், உழவர் சந்தைகளில் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவர் சந்தைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க இந்தாண்டு கூடுதலாக 6 … Read more