தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது – ப.சிதம்பரம்

புதுடெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதனால் காங்கிரஸ் தலைமை குறித்து அக்கட்சியினரிடையே அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.  இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதன் பிறகு நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் … Read more

14,15,916 விவசாயிகளுக்கு பயிர்கடன்.. அரசு நிலங்களுக்கு புதிய குத்தகை கொள்கை மூலம் கூடுதல் வருமானம்!

இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தமிழக அரசு விவசாயத் துறைக்குத் தேவையான நீர் ஆதாரத்தை உறுதி செய்யும் வகையில் 2022-23 ஆம் நடப்பாண்டில் கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும், நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளச் சுமார் 2,787 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளையில் விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக இருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காகவும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தென் … Read more

விபத்தில் காயம்; கால்பந்து விளையாட முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர்‌ தற்கொலை? – போலீஸ் விசாரணை!

விருதுநகர் பட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் சிவராஜன்-லதா தம்பதியினர். இவர்களின் மகன் செல்வக்குமார் (22). விருதுநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் உடற்கல்வியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய செல்வக்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பின்னர், அவர் அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதான மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடு எது? வெளியான ஆச்சரியமான பட்டியல்

ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததன்முலம் ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுயது. இன்று வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அட்டவணையில் லெபனான், வெனிசுலா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன. பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டுள்ள லெபனான், ஜிம்பாப்வேக்குக் கீழே 146 நாடுகளின் குறியீட்டில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்திற்குச் சரிந்தது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், ஏற்கனவே அட்டவணையில் கீழே உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் … Read more

#AK62 : அஜித்துடன் கைகோர்க்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், அஜித்தின் #AK62 குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். We are extremely delighted & proud to associate with Mr. #AjithKumar for #AK62 💥 … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் மீதான ரஷியா போர் 23-வது நாள்- சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன்

போலந்து எல்லையில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள லிவிவ் நகரத்தின் விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் ரஷியா இன்று ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.  18-03-2022 19.20: உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பில் 816 பேர் கொல்லப்பட்டதாகவும், 1333 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. 19.15: உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போரை நிறுத்தும்படி ரஷியாவுக்கு … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என ஆலோசனை நடைபெறுகிறது.

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் தலாய்லாமா| Dinamalar

தர்மசாலா: திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா, இரண்டாண்டுகளுக்கு பின் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமா, கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதால், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். ஹிமாச்சல் பிரதேசம், தர்மசாலாவில் தங்கியுள்ளார்.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். வயது மூப்பு காரணமாக அவரது உடல் நல நிலை என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று (மார்ச்.18) பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரது … Read more

கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டம் – மாநில கல்வித்துறை மந்திரி தகவல்

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக மாநில கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலமாக பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.  மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை வழங்கும் வகையில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் வைப்பது குறித்து கல்வி நிபுணர்களுடன் … Read more

தொழிற்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன.. மாஸ் காட்டும் தமிழக அரசு!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக பட்ஜெட்டினை நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். குறிப்பாக தொழிற்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சரி தொழிற்துறைக்கு எந்த மாதிரியான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகின? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். பட்ஜெட்டில் இந்த 4 துறைகளுக்கு முக்கியத்துவம்.. ஏன்..பிடிஆர் சொல்வதென்ன? உலக முதலீட்டாளார்களை ஈர்க்க திட்டம் தமிழில் பட்ஜெட்டினை வாசித்த பிடி ஆர் தீடிரென தனது உரையினை ஆங்கிலத்தில் வாசித்தார். … Read more