பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று ஜம்முவுக்கு பிரதமர் பயணம்| Dinamalar

புதுடில்லி-அடுத்த மாதம் வரும், ‘பஞ்சாயத்து ராஜ்’ தினத்தன்று, பிரதமர் மோடி ஜம்மு – காஷ்மீருக்கு சென்று, வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.நம் நாட்டில், ஆண்டுதோறும் ஏப்ரல் 24ம் தேதி, பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணித்து, அங்குள்ள பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதை, பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் வரும் பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று, பிரதமர் ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல உள்ளதாக தகவல் … Read more

இந்தியாவில் கோவிட் 4வது அலை: மருத்துவ நிபுணர்கள் தகவல்| Dinamalar

புதுடில்லி,-‘நாட்டில், கொரோனா வைரசின் நான்காவது அலை கண்டிப்பாக இருக்கும். எனினும், அது உடனடியாக ஏற்படாது’ என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நம் நாட்டில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், தென் கொரியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், வைரசால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இது, நம் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.இந்நிலையில், நம் நாட்டில் நான்காவது அலை கண்டிப்பாக இருக்கும் என்றும்; அது உடனடியாக ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மருத்துவ … Read more

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேருங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்களையும்  பழங்குடியினர் பட்டியலில் சேருங்கள் என வலியுறுத்தி பிரதமர்  மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நரிக்குறவர்களையும்  பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965-ம் ஆண்டிலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு 1967-ம் ஆண்டிலும் பரிந்துரைத்தன என்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகளில் … Read more

நிரம்பும் பிணவறைகள்… இரயில்களில் கடத்தப்படும் சடலங்கள்: திணறும் ரஷ்ய துருப்புகள்

உக்ரைனின் அண்டை நாடான பெலாரசில் பிணவறைகள் நிரம்பி வருவதாகவும், இரவு நேரங்களில் மட்டும் இரயில், பேருந்துகளில் ரஷ்ய வீரர்களின் சடலங்களை உக்ரைனில் இருந்து கொண்டு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் நாட்டின் மசீரில் உள்ள பிணவறை சடலங்களால் நிரம்பி வழிகிறது என்று நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். அங்கிருந்து ரஷ்ய இரயில்களில் உடல்களை அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குவியல் குவியாக சடலங்களை இரயில் நிலையத்தில் பார்க்கும் மசீர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் எனவும், … Read more

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.1 லட்சம்- பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:- வேளாண்மை தோட்டக்கலை பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு 2022- 23-ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளீனிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும். விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை … Read more

இன்றைய ராசி பலன் | 20/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

19/03/2022: தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்தது கொரோனா – இன்று 58 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இன்று 58 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தவலின்படி,  “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட  58 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள்.  இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் … Read more

ரஷ்யாவை சாராமல் இருக்க ஜேர்மன் மக்கள் அளித்துள்ள மிகப்பெரிய ஆதரவு!

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்க வாரம் ஒரு நாள் கார் பயன்படுத்தாமல் இருக்க பெரும்பாலான ஜேர்மன் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் WELT எனும் ஒளிபரப்பு நிறுவனம் நடத்திய Civey கருத்துக் கணிப்பின்படி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க உதவும் வகையில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளைக்கு மட்டும் கார்களை பயன்படுத்தாமல் இருக்க 48 சதவீதம் மக்கள் ஆதரவளிக்க தயாராகி இருக்கின்றனர். அதேசமயம் 46 சதவீதம் பேர் இந்த யோசனையை எதிர்க்கின்றனர். ஜேர்மனியில் … Read more

பட்ஜெட் மீது விவாதம்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி தலைமை ஆலோசனை

சென்னை: தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை  பட்ஜெட் மீது விவாதம் நடைபெற உள்ளது.  பட்ஜெட் விவாதத்தின்மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காரசாரமாக பேச உள்ளனர். இதுபற்றி முடிவு செய்வதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் தொடங்கியது.  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரில் … Read more

5 எல்லைகளை சீரமைக்க ரூ.7,000 கோடியில் திட்டம்| Dinamalar

புதுடில்லி:எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை ஒடுக்க, நாட்டின் ஐந்து முக்கிய எல்லைகளில் உள்கட்டமைப்பை சீரமைக்க 7,000 கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளின் எல்லைகளில், ஊடுருவல் மற்றும் பயங்கரவாத செயல்களை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 2023ம் ஆண்டுக்குள் 7,000 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு சீரமைக்கப்படும். இந்த திட்டத்தில் புதிய சாலைகள், பாலங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், அதிநவீன மின் விளக்குகள் ஆகியவை … Read more