திருமலை ஏழுமலையான் தரிசனம் விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு| Dinamalar

திருப்பதி:திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, ஏப்ரல் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம், ஏப்ரல் முதல் ஏழுமலையானுக்கு ஆர்ஜித சேவைகளை துவங்க உள்ளது.அதற்கான டிக்கெட்டுகள், நாளை முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாளும், மே மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் 23ம் … Read more

McDonald’s லோகோ-வை திருடிய ரஷ்ய நிறுவனம்.. அடபாவிகளா..!

உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து ரஷ்யாவை மொத்தமாக ஒதுக்கி வைத்துள்ள நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் ரஷ்ய நிறுவனங்கள் வெளியேறிய வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..! ஆனால் உலகப் பல முன்னணி பிராண்டுகள் வெளியேறிய பின்பு இந்த இடத்தைப் பிடிப்பதும், மக்களுக்கு அதே பிராண்ட் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினம் என்பதால், முன்னணி பிராண்டு … Read more

`எளிதில் பணம் சம்பாதிக்க, படம் பார்த்து பைக்குகளை திருடினோம்’ – கோவையில் சிக்கிய இருவர்

பைக் திருட்டு எல்லா ஊர்களிலும் தடுக்க முடியாத விஷயமாகிவிட்டது. கோவை சுற்றுவட்டாரங்களில் பைக்குகளை திருடி, ஆன்லைன் மூலம் விற்கும் கும்பல் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. ராகுல் கிருஷ்ணா என்ற இளைஞர், கணபதி அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக் திருடுபோனது குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தார். கோவை UPS வெடித்து உயிரிழந்தனரா மூன்று பெண்கள்; கோவை விபத்தில் நடந்தது என்ன? அந்த பைக்கை விற்பது தொடர்பாக பரவிய ஓர் வாட்ஸப் மெசேஜ் … Read more

அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம்

அமேசான் காட்டில் தொலைந்துபோன பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் 25 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டனர். ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிரேசிலிய பழங்குடியின சிறுவர்கள் 25 நாட்கள் அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போயுள்ளனர், அங்கு அவர்கள் பழம் சாப்பிட்டு, மழைநீரைக் குடித்து உயிருடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 15 செவ்வாய்க்கிழமையன்று மீட்கப்பட்ட சகோதரர்களான 7 வயது Glauco மற்றும் 9 வயது Gleison, அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 35 கிலோமீட்டர் … Read more

பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பகவந்த் மான் அமைச்சரவை பதவியேற்பு விழா பஞ்சாப் ராஜ்பவனில் நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு  ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நடைபெற்று முடிந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது. 117 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதி களை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. … Read more

வேளாண் பட்ஜெட்- மின்மோட்டார் பம்பு செட்டுகளுக்கு ரூ.5 கோடி மானியம்

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- மண்ணில் உண்டியல் போல சேமித்த மழைநீரை குழாய்க் கிணறு, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றிலிருந்து பாசனத்திற்கு இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், … Read more

செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS ஒப்படைத்தார். மொபைல் தொலைந்து போனால் உடனடியாக IMEI எண்ணுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் எனவும் எஸ்.பி. அரவிந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வங்க தேசத்தில் ஹிந்து கோயில் சேதம்| Dinamalar

டாக்கா: வங்க தேசத்தில் ‘இஸ்கான்’ அமைப்புக்கு சொந்தமான கோயிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சிலைகளை சேதப்படுத்தியதோடு பக்தர்களையும் தாக்கியது. காயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அண்டை நாடான வங்க தேசத்தின் டாக்கா நகரில் இஸ்கான் அமைப்பின் கிருஷ்ணர் கோயில் உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நேற்று இங்கு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது.அப்போது ஹாஜி சைபுல்லா என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கோயிலுக்குள் புகுந்தனர். கோஷமிட்டவாறு வந்த அந்த கும்பல் … Read more

அம்பானியால் முடியாததை அதானி செய்கிறார்.. சவுதி ஆராம்கோ உடன் டீல்..!

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்த சவுதி ஆராம்கோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மத்தியிலான டீல் தோல்வி அடைந்தது. இதனால் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சவுதி ஆராம்கோ உடன் கூட்டணி வைக்க முடியாத நிலை உருவானது. இந்நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் சவுதி அரேபியா உடன் முக்கியமான கூட்டணியை உருவாக்கவும், சவுதி ஆராம்கோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் … Read more

போதைக்கு வலி நிவாரணம்; மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் -மூளையாக செயல்பட்ட பெண் ராஜலட்சுமி கைது

சென்னையில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னைப் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் கடந்த 17.3.2022-ம் தேதி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். கிஷோர்குமார் இதையடுத்து … Read more