காஷ்மீர் குறித்து ஹூண்டாய் சர்ச்சை கருத்து – தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்திய வெளியுறவுத்துறை

புதுடெல்லி: பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என பிப்ரவரி 5-ம் தேதியை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. கடந்த 5-ம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இதற்கிடையே, ஹூண்டாய் … Read more

தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கூறினார்.

பெங்களூரு மருத்துவமனைகளில் மீண்டும் தோல் தானம்| Dinamalar

பெங்களூரு-பெங்களூரு மருத்துவமனைகளில் மீண்டும் தோல் தானம் எண்ணிக்கை, வழக்கத்துக்கு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்து மற்றும் பல்வேறு காயங்களால் தோல் சிதைந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தானம் செய்வோர் தோல் பயன்படுத்தப்படுகிறது.கண், ரத்தம் போல தோல் தானமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விருப்பமுள்ளோர், மருத்துவமனைகளில் பதிவு செய்கின்றனர்.இறந்த பின், அவர்களின் உடலின் குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் தோல் எடுத்து மருத்துவமனைகள் பதப்படுத்துகின்றன.பெங்களூரில் அதிகமான தோல் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கலான சூழலை சமாளிக்க வேண்டியிருந்தது.கொரோனாவால் … Read more

5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..!

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் திங்கட்கிழமை 93 டாலரில் தாண்டி 94 டாலரை நெருங்கியது, ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த சில வருடங்களாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேர்தல் நடக்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வருகிறது. இதேபோல் தற்போது 5 மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரு … Read more

நீட் விலக்கு மசோதா: `நீட் என்பது தேர்வு இல்லை… பலிபீடம்!’ – முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்

மு.க.ஸ்டாலின் “சில மாணவர்களைக் கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” ஸ்டாலின் ஆவேசம் “ஒரு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி , அதை ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமென்றால் மாநிலங்களின் கதி என்ன?” பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் “நீட் தேர்வு என்பது பணக்கார நீதியைப் பேசுகிறது. அரசியல் அமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது.” சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின் “நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்தால் உருவானது இல்லை. நீட் தேர்வு தேவை என்பது … Read more

உக்ரைனை தாக்கினால் இது தான் கதி! ரஷ்யாவுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க மற்றும் பிற நடவடிக்கை எடுக்க பிரித்தானியா தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஐரோப்பாவை பாதுகாக்க பிரித்தானியா விமானப்படையின் போர் விமானங்களை மற்றும் கடற்படையின் போர் கப்பல்களை அனுப்புவது குறித்து பிரித்தானியா பரிசீலித்து வருதாகக் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் Ben Wallace மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் Liz இருவரும் விரைவில் ரஷ்யாவுக்கு பயணிப்பார்கள். உக்ரைன் மீது ரஷ்யா … Read more

10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுவதாக இருந்த 10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்து, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி  19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால், தொற்று பரவல் … Read more

நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு- எடப்பாடி பழனிசாமி

சென்னை: நீட் எதிர்ப்பு மசோதாவை ஆதரித்து சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- நீட் எதிர்ப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. எப்போதும் உறுதியாக உள்ளது. ஆனால் நீட் தேர்வு அ.தி.மு.க.வால் தான் கொண்டு வரப்பட்டது என்று தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. பொது வெளியில் எங்களை குறை கூறி பேசுகிறார்கள். நீட் தேர்வு எப்படி வந்தது? என்று அனைவருக்குமே தெரியும். அதைத்தான் எங்களது சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரும் பேசி இருக்கிறார். நீட் தேர்வு தொடர்பாக … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரியவந்தால் அரசுக்குத்தான் சிக்கல். அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றுதலில் இந்து கோயில்களை மட்டும் இடிப்பதாக இந்து முன்னணி நிர்வாகி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்| Dinamalar

பெங்களூரு-”உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி.பாட்டீலுக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.பர்தா விவாதத்தை கர்நாடக அரசே உருவாக்கியதாக, எம்.பி.பாட்டீல் குற்றம் சாட்டினார். இவருக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., நேற்று கூறியதாவது:நீங்கள் காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவர் என்பதால், பரபரப்பாக இருக்கும் நோக்கில், உரையாற்ற சரக்கு தேடாதீர்கள்.சீருடை கட்டுப்பாடு குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முன், உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை … Read more