காஷ்மீர் குறித்து ஹூண்டாய் சர்ச்சை கருத்து – தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்திய வெளியுறவுத்துறை
புதுடெல்லி: பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என பிப்ரவரி 5-ம் தேதியை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. கடந்த 5-ம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ஹூண்டாய் … Read more