திருவண்ணாமலை அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது

திருவண்ணாமலை: ஆரணி அருகே விடுதி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் துணை வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் தங்கிபயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் துரைபாண்டியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை| Dinamalar

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுள் மற்றும் உக்ரைன் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 18வது நாளாக நீடிக்கிறது. தாக்குதல் துவங்கிய பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பல முறை பிரதமர் ஆலோசனை நடத்தினார். மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகவும் ஆலோசனை நடந்தது. பின்னர் ஆபரேசன் கங்கா திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு இந்தியர்கள் அழைத்து … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வருடாந்திர தெப்போற்சவம்…!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஸ்ரீவாரி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்பம் பவனி வருகிறது.  முதல் நாள் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 3-வது நாள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி … Read more

கூடை கூடையாகப் பதுக்கப்பட்டிருந்த பச்சைக் கிளி, முனியாஸ் குருவி குஞ்சுகள்; மீட்ட திருச்சி வனத்துறை!

திருச்சி, கீழப்புதூர் குருவிக்காரன் தெருவிலுள்ள சில வீடுகளில், பச்சைக் கிளிகள் விற்பனைக்காக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து வனப் பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் நாகையா தலைமையிலான குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட முனியாஸ் எனச் சொல்லப்படும் குருவிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவற்றை வன பாதுகாப்புப் படையினர் மீட்டு, திருச்சி கோர்ட் வளாகத்திலுள்ள … Read more

'உங்க உயிரை நீங்கதான் காப்பாத்திக்கணும்' ரஷ்யர்களுக்கு ஜெலென்ஸ்கி நேரடி எச்சரிக்கை!

ரஷ்யப் படைகள் தலைநகர் கீவை ஆக்கிரமிக்க முயற்சித்தால் மரணப் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் கீவை சூழ்ந்துள்ள நிலையில், இன்று காலை வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒளித்துள்ளது. இது மீண்டும் அங்குள்ள குடியிருப்பாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவிலிருந்து இன்று காலை சமூக ஊடகங்களில்  தோன்றிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களின் மூன்றாவது வாரத்தில் சில சிறிய நகரங்கள் இல்லாமல் போனதாக கூறினார். இது … Read more

போலீஸ் கமிஷனர் கார் மீது மோதிய வழக்கில் பே டிஎம் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா கைதாகி விடுதலை…

பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி மாதம் 22 ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் அதே நாளில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மதர் இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே நின்றுகொண்டிருந்த தெற்கு டெல்லி போலீஸ் கமிஷ்னர் பெனிடா மேரி ஜெய்கர் காரின் மீது மோதிய விஜய் சேகர் சர்மாவின் ஜாகுவார் ரக சொகுசு … Read more

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி பயணம்

சென்னை: தலைநகர் டெல்லியில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம்  கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி டெல்லி செல்கிறார். தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி, மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது  இதையும் படியுங்கள்…கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத … Read more

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நடைப்பயிற்சி சென்ற பாதை,அவர் கடத்தப்பட்டதாக கூறும் பகுதி, உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ராமஜெயம் நடைப்பயிற்சி சென்றதாக கூறிய 15-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

தங்கம் விலை மீண்டும் குறையலாம்.. எவ்வளவு சரியும்..வாங்கலாமா.. நிபுணர்களின் செம கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டிய நிலையில், வார இறுதியில் சற்றே சரிவினைக் கண்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், வரும் வாரத்திலும் இந்த போக்கு தொடரலாமா? அப்படி குறைந்தால் எவ்வளவு குறையலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். இதற்கிடையில் கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை எப்படியிருந்தது? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். … Read more

`2 இடங்களில் ஓட்டு போட்ட திமுக பெண் கவுன்சிலர்?' – நீதிமன்றம் வரை சென்ற சுயேச்சை – திருச்சி சர்ச்சை

பிப்ரவரி 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பவர், கருமண்டபம் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647-வது வாக்குச் சாவடிக்கு தனது வாக்கினை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், “உங்க ஓட்டு ஏற்கனவே போட்டாச்சே!” எனச் சொல்ல, “நான் இப்ப தானேங்க வரேன். என்னோட ஓட்டை யார் போட்டது!” என முத்துலட்சுமி கேட்க பெரும் பரபரப்பு உண்டானது. உடனே, அந்த … Read more