'உங்க உயிரை நீங்கதான் காப்பாத்திக்கணும்' ரஷ்யர்களுக்கு ஜெலென்ஸ்கி நேரடி எச்சரிக்கை!

ரஷ்யப் படைகள் தலைநகர் கீவை ஆக்கிரமிக்க முயற்சித்தால் மரணப் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் கீவை சூழ்ந்துள்ள நிலையில், இன்று காலை வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒளித்துள்ளது. இது மீண்டும் அங்குள்ள குடியிருப்பாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவிலிருந்து இன்று காலை சமூக ஊடகங்களில்  தோன்றிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களின் மூன்றாவது வாரத்தில் சில சிறிய நகரங்கள் இல்லாமல் போனதாக கூறினார். இது … Read more

போலீஸ் கமிஷனர் கார் மீது மோதிய வழக்கில் பே டிஎம் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா கைதாகி விடுதலை…

பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி மாதம் 22 ம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் அதே நாளில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மதர் இன்டர்நேஷனல் ஸ்கூல் அருகே நின்றுகொண்டிருந்த தெற்கு டெல்லி போலீஸ் கமிஷ்னர் பெனிடா மேரி ஜெய்கர் காரின் மீது மோதிய விஜய் சேகர் சர்மாவின் ஜாகுவார் ரக சொகுசு … Read more

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி பயணம்

சென்னை: தலைநகர் டெல்லியில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயம்  கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி டெல்லி செல்கிறார். தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி, மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது  இதையும் படியுங்கள்…கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத … Read more

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

சென்னை: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. நடைப்பயிற்சி சென்ற பாதை,அவர் கடத்தப்பட்டதாக கூறும் பகுதி, உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே ராமஜெயம் நடைப்பயிற்சி சென்றதாக கூறிய 15-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

தங்கம் விலை மீண்டும் குறையலாம்.. எவ்வளவு சரியும்..வாங்கலாமா.. நிபுணர்களின் செம கணிப்பு..!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டிய நிலையில், வார இறுதியில் சற்றே சரிவினைக் கண்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், வரும் வாரத்திலும் இந்த போக்கு தொடரலாமா? அப்படி குறைந்தால் எவ்வளவு குறையலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். இதற்கிடையில் கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை எப்படியிருந்தது? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். … Read more

`2 இடங்களில் ஓட்டு போட்ட திமுக பெண் கவுன்சிலர்?' – நீதிமன்றம் வரை சென்ற சுயேச்சை – திருச்சி சர்ச்சை

பிப்ரவரி 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பவர், கருமண்டபம் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647-வது வாக்குச் சாவடிக்கு தனது வாக்கினை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், “உங்க ஓட்டு ஏற்கனவே போட்டாச்சே!” எனச் சொல்ல, “நான் இப்ப தானேங்க வரேன். என்னோட ஓட்டை யார் போட்டது!” என முத்துலட்சுமி கேட்க பெரும் பரபரப்பு உண்டானது. உடனே, அந்த … Read more

ரஷ்ய ராணுவத்தை அழித்தொழிக்கும் உக்ரைன் பைரக்டர் விமானம்: அதிரடி தாக்குதல் காட்சிகள்!

உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ரஷ்ய ராணுவ துருப்புகளை பைரக்டர் Bayraktar என்ற ஆளில்லா போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தி உக்ரைன் ராணுவம் அதிரடிக்காட்டி வருகிறது. உக்ரைனில் 18வது நாளாக போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கீவ்வை ரஷ்ய துருப்புகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போரின் 17வது நாளான நேற்று நகரின் பெரும்பாலான பகுதிகளில் வான் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு … Read more

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சனிக்கிழமை (மார்ச் 12) அன்று பிரீமியர் லீக் போட்டியாளர்களான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்கு எதிராக ஒரு சிறந்த ஹாட்ரிக் சாதனையுடனான வெற்றிக்குப் பிறகு 807 கோல்களுடன் தொழில்முறை கால்பந்தாட்டத்தின் அனைத்து நேர முன்னணி வீரர் என்ற சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து வரலாறு … Read more

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னரை நீக்க வேண்டும்- வைகோ அறிக்கை

சென்னை: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய கவர்னர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக் கழகங்கள் வளர்க்க வேண்டும். மாநில அரசுகளின் கல்விக் கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே … Read more

சென்னையில் போலீஸ் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பி ஓட்டம்!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பியோடினர். பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 பேர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டி வந்த செல்வமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.