சென்னையில் போலீஸ் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பி ஓட்டம்!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் தப்பியோடினர். பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றித் திரிந்த 5 பேர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டி வந்த செல்வமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ஒயிட் காலர் பிச்சைக்காரர்கள் கேரள அமைச்சர் சர்ச்சை கருத்து| Dinamalar

திருவனந்தபுரம் : ”அரசு பணியில் இருக்கும் ஒரு பிரிவினர், ‘ஒயிட் காலர்’ பிச்சைக்காரர்கள் போல் இழிவாக நடந்து கொள்கின்றனர்,” என, கேரள அமைச்சர் கோவிந்தன் கூறி உள்ளார். அவமானம் கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இம்மாநில உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று பேசியதாவது: சமுதாயத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில், இழிவான நபர்களின் ஒரு குழு … Read more

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட பெட்ரோல் விலை.. இந்தியாவில் எப்போது?

சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுவது எரிபொருள் விலை அதிகரிப்பு தான். வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே எரிபொருள் விலை அதிகரிப்பால், 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. அந்தளவுக்கு எரிபொருள் விலையானது உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், இன்னும் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. தங்கம் விலை மீண்டும் குறையலாம்.. எவ்வளவு சரியும்..வாங்கலாமா.. … Read more

IND vs SL: ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்… இன்றே முடிந்துவிடுமா பிங்க் பால் டெஸ்ட்?

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி ஆல்-அவுட், அடுத்த களமிறங்கிய இலங்கை பேட்டர்களில் பாதி பேர் பெவிலியனில். இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் போட்டி முதல் நாளின் முடிவிலேயே மூன்றாவது நாள் போல மாறியிருக்கிறது. Shreyas Iyer முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை அகர்வாலுக்கு ஃபுல்லராக அவுட்சைட் ஆஃபில் வீசினார் லக்மல். பந்து பிட்சான இடத்தில் புழுதி நன்றாக எழும்பியது. அந்த ஒற்றை பந்தே ஆட்டத்தின் மொத்த போக்கையும் தெளிவாகக் கூறிவிட்டது. … Read more

ஆழம் தெரியாமல் காலை விட்ட புடின்! திணறும் ரஷ்யா… கெத்து காட்டும் உக்ரைன்

உக்ரைன் – ரஷ்யா போர் தொடரும் நிலையில் தற்போது ரஷ்யாவின் ராணுவ படை மற்றும் பீரங்கிகள் முன்னேற முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தாக்குதலை தொடங்கிய நிலையில் 15 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது. போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான … Read more

தொடங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து சோனியாகாந்தி இல்லத்தில் நடந்து வரும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள்

உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்கள் பலரும் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் ஐக்கிய நாட்டு சபை கோரிக்கை விடுத்தது. இதுபோல போப் பிரான்சிசும் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார். போப் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷியா ஏற்கவில்லை. நேற்றும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டதாக … Read more

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கம் திமுக தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர்கள் என்றால் ஒரு உணர்வு வரும், அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி, உக்ரைனில் இருந்தாலும் சரி. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு குழு அமைத்து மாணவர்களை மீட்டு அழைத்துவந்துள்ளோம் என முதல்வர் கூறியுள்ளார்.

இந்தியாவில் மேலும் 3,116 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,116 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,559 பேர் குணமடைந்துள்ளனர். 47 பேர் உயிரிழந்துள்ளனர்தற்போது 38,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4,24,37,072 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,15,850 ஆகவும் உயர்ந்தது.தற்போது வரை 180.13 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,116 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,559 … Read more

கண்கலங்கிய ஜெயக்குமார் முதல் உதயநிதியிடம் உரிமை கொண்டாடிய காந்தி மகன் வரை..! – கழுகார் அப்டேட்ஸ்

முன்னாள் ஐ.ஏ.எஸ் மீது புகார்…“நாயைக் காட்டி குழந்தையை பயமுறுத்தினார்!” முன்னாள் ஐ.பி.எஸ் பெண் அதிகாரி ஒருவரின் பேத்தியை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக அண்ணாநகர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மகன் கொடுத்துள்ள அந்தப் புகாரில், ‘என் 12 வயது மகள் லிஃப்டில் செல்லும்போது, அதே லிஃப்டில் நாயுடன் வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, நாயைக் காட்டி என் குழந்தையை பயமுறுத்தினார். அதோடு குடியிருப்போர் நலச் சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பிலும், … Read more