இந்தியாவுக்கு ஏவுகணைகளை வழங்குவது பாதிக்காது: ரஷ்யா| Dinamalar
புதுடில்லி: ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், இந்தியாவுக்கு ‘எஸ்-௪௦௦’ எவுகணைகள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என, ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய துாதராக நியமிக்கப்பட்டுள்ள டென்னிஸ் அலிபோவ் கூறியதாவது: உக்ரைன் மீது எடுத்துள்ள நடவடிக்கையை காரணம் காட்டி, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த தடையால், இந்தியாவுக்கு எஸ்-௪௦௦ ஏவுகணைகளை, ரஷ்யா வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. உக்ரைன் விவகாரத்தில், இந்தியாவின் நடுநிலை பாராட்டத்தக்கது. பிரச்னைக்கான காரணத்தை இந்தியா புரிந்து … Read more