சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை
சென்னை: சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசில் பதிவு செய்யாமலும், 21 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிடாமலும் தேர்தல் நடத்தப்படுவதாக கபடி வீரர் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.