உக்ரைனுக்கு உதவி., ரஷ்யாவுக்கு தடை: கனடா அதிரடி நடவடிக்கை!

கனடா உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கவுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்கிறது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக கனடா, உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை வழங்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைனின் வீரமிக்க பாதுகாப்புக்கு கனடா … Read more

என் ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது : ராகுல் காந்தி நெகிழ்ச்சி

சென்னை தமது ரத்தம் தமிழக மண்ணில் கலந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்னும் தன் வரலாற்று நூல் முதல் பாகம் வெளியிடப்பட்டது.  இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.  முதல் பிரதியைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். விழாவில் சிறப்பு … Read more

ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்

ஜெனீவா: உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது. இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ்,  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் … Read more

மார்ச்.01: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கிரைம் கார்னர்| Dinamalar

நீரில் மூழ்கி இருவர்கள் பலி துமகூரு சிரா, எம்.தாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கங்கராஜு, 27, இவரது தம்பி ஹனுமந்தராஜு, 21, நேற்று காலை, மாடுகளை குளிப்பாட்ட ஏரிக்கு சென்றனர். அப்போது தம்பி கால் தவறி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற அண்ணன் முயற்சித்ததால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கஞ்சா விற்றவர் கைது—பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், காலியிடத்தில் நேற்று முன் தினம் இரவு, கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று … Read more

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து..!

மும்பை, மும்பையின் காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு … Read more

தமிழகத்திற்கு நல்ல சான்ஸ்.. ஹெச்பி-யின் அதிரடி திட்டம்..!

இந்தியாவின் கணினி சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் அமெரிக்காவினை சேர்ந்த முன்னணி கணினி நிறுவனமான ஹெச்.பி (HP Inc), 2021ம் ஆண்டில் 14.8 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மொத்த கணினி சந்தையில் 31.5% பங்கு வகித்துள்ளது. இதற்கிடையில் ஹெச்.பி-யின் ஏற்றுமதியானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 58.7% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வணிக ரீதியாகவும், நுகர்வோர் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களிலும் நல்ல வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. ஹெச்பி-யின் பெரும்பாலான ஹார்டுவேர் பொருட்கள் … Read more

12 ரஷ்ய ஐ.நா தூதர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்!

ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதரகப் பணியை சேர்ந்த 12 பேர் மார்ச் 7-ஆம் திகதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக உலக அமைப்பிற்கான ரஷ்யாவின் தூதர் தெரிவித்தார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா டால்டன் கூறுகையில், வெளியேற உத்தரவிடப்பட்டவர்கள் “நமது தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அமெரிக்காவில் தங்களுடைய சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் ஐநா தலைமையக ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கை பல மாதங்களாக வளர்ச்சியில் உள்ளது” … Read more

தனுஷின் ‘மாறன்’ டிரெய்லர் வெளியானது…

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் மார்ச் 11 ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. தமிழில் தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான ஜெகமே தந்திரம் படமும் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் இந்த திரைப்படமும் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பது தனுஷ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. மாறன் … Read more

அப்போது குலக்கல்வி… இப்போது நீட் தேர்வு: சுயசரிதை வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன்வரலாற்று நூலான “உங்களில் ஒருவன் பாகம் – 1” நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. நூலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். விழாவின் நிறைவாக முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- எப்போதும், என்றென்றும், எந்தச் சூழலிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் – உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது … Read more