உ.பி., யில் சட்டசபைத் தேர்தல் 5ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது| Dinamalar

லக்னோ: உ.பி., சட்டசபைக்கான ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு 61 தொகுதிகளில் இன்று (பிப்.,27) காலை 7 மணிக்கு துவங்கியது.. 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 403 தொகுதிகளை கொண்ட உ.பி., யில் சட்டசபை ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே பிப்ரவரி 10, … Read more

“உங்க மனைவிக்காக என் வாய்ப்பை மறுப்பதா?" – செந்தில் பாலாஜி முன்பு கொந்தளித்த மகளிரணி நிர்வாகி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த கோவை திமுக செயற்குழுக் கூட்டம் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோவை மாநகராட்சி மேயர் கனவுடன் தீவிரமாகப் பணியாற்றிவந்தவர் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். ஆனால், … Read more

பிரேக்டவுன் ஆகி நின்ற டாங்கி., ரஷ்ய வீரர்களை கேலி செய்த உக்ரைனியர்! வைரல் வீடியோ

டாங்கியில் எரிபொருள் இல்லாமல் நடுவழியில் தவித்துக்கொண்டிருந்த ரஷ்ய வீரர்களை உக்ரைனிய குடிமகன் துணிச்சலுடன் கேலி செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து மூணர்த்தாவது நாளாக சனிக்கிழமையும் தாக்குதல் நடத்தினர். ரஷ்ய படைகளுக்கு ஈடாக தலைநகர் கீவில் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து எதிர்தாக்குதல் நடத்திவருகின்றனர். உலக நாடுகள் பொருளாதார தடைகள் உட்பட பல தடைகளை விதித்து ரஷ்யாவிற்கு எதிர்ப்பும் கண்டனங்களும் தெரிவித்து வரும் நிலையிலும், உக்ரைனை அரசாங்கத்தை கைப்பற்றியே … Read more

ஆந்திரா, திரிபுராந்தகம், அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில்

ஆந்திரா, திரிபுராந்தகம் அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில் இந்த அற்புதமான திருக்கோவில் ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஓங்கோல் 93 கி.மீ. விஜயவாடா 150 கி.மீ. மார்கபூர் 40 கி.மீ. வினுகொண்டா 40 கி.மீ.தூரத்தில் உள்ளது. இறைவன் திருநாமம் ஶ்ரீ திரிபுராந்தகேஸ்வரசுவாமி இறைவி திருநாமம் ஶ்ரீ பார்வதி தேதி (அ) ஶ்ரீ பாலதிரிபுரசுந்தரி திரிபுராந்தகேஸ்வர சுவாமி கோவில் மற்றும் பாலா திரிபுரசுந்தரி கோவில் ஆகியவை ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், மார்கபூர், திரிபுராந்தகத்தில் அமைந்துள்ளது. … Read more

தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 480 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.நேற்றைய பாதிப்பு 618 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 46 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட … Read more

பிப்-27: பெட்ரோல் விலை ரூ.101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

செய்திகள் சில வரிகளில்| Dinamalar

எடியூரப்பாவுக்கு வயது 79 பெங்களூரு: பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று பிறந்த தினம். 79 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதை ஒட்டி, பெங்களூரு குமாரகிருபா சாலையில் காவிரி இல்லத்தில் ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்கள் வழங்குகிறார். கொரோனாவால் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுுவதில்லை என்றும், யாரும் பூங்கொத்து, சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம் என்றும் கேட்டுகொண்டுள்ளார். 115 பேருக்கு வேலை பெங்களூரு: கர்நாடக திறமை அபிவிருத்தி வாரியம் சார்பில், மல்லேஸ்வரத்தில் நேற்று … Read more

கொள்கையை மாற்றிக்கொண்ட ஜேர்மனி! உக்ரைனுக்கு பயங்கர ஆயுதங்களை கொடுக்க ஒப்புதல்

ஆயுதங்கள் கொடுத்து உதவ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உக்ரைனுக்கு டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகள் போன்ற பயங்கர ஆயுதங்களை ஜேர்மனி அனுப்பவுள்ளது. ஜேர்மனி சனிக்கிழமை ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கான தனது ஆதரவை வியத்தகு முறையில் அதிகரித்தது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் SWIFT இன்டர்பேங்க் அமைப்புக்கான ரஷ்யாவின் அணுகலைக் கட்டுப்படுத்தவும் ஜேர்மனி ஒப்புக்கொண்டது. உக்ரைனுக்கு ஒரு பெரிய அளவிலான பயங்கர ஆயுதங்களை வழங்க ஒப்புதல் … Read more

மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து! தனியார் கல்லூரி விழாவில் முதலமைச்சர் உரை…

சென்னை: மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து; உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதே இலக்கு என்று சென்னை தனியர் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தொடக்க விழா இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் உன் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள்  மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய நவீன … Read more

ஹெல்ப்லைன் எண்களைப் பயன்படுத்த வேண்டும் – உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வேண்டுகோள்

கீவ்: உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஹெல்ப்லைன் எண்களைப் பயன்படுத்த வேண்டும். அங்குள்ள இந்திய அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் எல்லை பகுதிகளுக்கு செல்லக் கூடாது. பல்வேறு எல்லைச் சோதனைச் சாவடிகளில் நமது மக்களை ஒருங்கிணைத்து வெளியேற்றுவதற்காக நமது அண்டை நாடுகளில் உள்ள நமது தூதரகங்களுடன் உக்ரைன் இந்திய தூதரகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. முன்னறிவிப்பின்றி எல்லைச் சோதனைச் சாவடிகளை அடையும் இந்திய குடிமக்களை வெளியேற்றுவது கடினமாக … Read more