“புதினின் நடவடிக்கைக்கு எதிராகப் போராடினால்…!" – ரஷ்ய மக்களை எச்சரிக்கும் அதிகாரிகள்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த போர் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட்டால் அவர்களும் அதன் விளைவைச் சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த போர் காரணமாக விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. புதினுக்கு எதிராக போராடும் உக்ரைன் மக்கள் இந்த நிலையில், உலக நாடுகள் … Read more

இதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்! ரஷ்யா அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து நிதிச் சந்தையைப் பாதுகாக்க ரஷ்யா தயாராக உள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அதேசமயம், உக்ரைன் மீது போரை தொடங்கிய சில மணி நேரத்தில் ரஷ்யாவின் பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், நிதிச் சந்தைகள் மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களை மீதான சாத்தியமான பொருளாதாரத் தடைகள் … Read more

இன்று ரஷ்ய அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை

டில்லி உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.  இதையொட்டி ரஷ்ய ராணுவத்தினர் தரை வழி மற்றும் வான் வழி மூலம் அந்நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   நாடெங்கும் ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பெய்து வருகின்றன.  இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இரு தரப்பு … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அரைநிர்வாணப்படுத்தி தாக்கினர்.   இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். இதற்கு கண்டனம் … Read more

ரஷ்ய அதிபர் புதினுடன் இன்றிரவு பிரதமர் மோடி பேசுகிறார்?

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடர்பாக அதிபர் புதினுடன் இன்றிரவு பிரதமர் மோடி பேசுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை – பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.  ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி-யிடம் இருந்து ரூ.18000 கோடி வசூல்..!

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோரிடம் இருந்து இதுவரை 18000 கோடி ரூபாய் அளவிலான தொகையை மீட்டு உள்ளதாக இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். துஷார் மேத்தா மத்திய அரசின் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான பென்ச் முன்நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டு வழக்குகளின் … Read more

`நாட்டை காக்க தயாராக இருங்கள்… யார் வந்தாலும் ஆயுதம் வழங்கப்படும்!' – உக்ரைன் அதிபர் ட்வீட்

உக்ரைன் மீது ரஷ்யா இன்று காலை முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. `மக்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள். நாட்டை காப்பதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்’ என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்து வருகிறது. Russia treacherously attacked our state in the morning, as Nazi Germany did in #2WW years. As of today, our countries are on … Read more

விரைவில் பிரித்தானியாவும் ரஷ்யாவுடன் போரிடும் நிலை உருவாகலாம்: எச்சரிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி

விரைவில் பிரித்தானியாவும் ரஷ்யாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர், ரஷ்யா நேட்டோ நாடுகளுக்குள் கால் வைத்தால், நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் போருக்கு அழைக்கப்படலாம் என்று கூறியுள்ளார். நேட்டோவின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் Sir Richard Shirreff, ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்வதுடன் விடமாட்டார், அவர் அந்த பகுதியிலுள்ள மற்ற நாடுகளையும் கைப்பற்றப் பார்ப்பார் என்று கூறியுள்ளார். புடின் மீண்டும் ஒரு சோவியத் யூனியனை உருவாக்க விரும்புவதாக … Read more

நேரடியாக உக்ரைனுக்குப் படைகளை அனுப்ப முடியாது : நேட்டோ அமைப்பு அறிவிப்பு

நியூயார்க் நேரடியாக உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ரஷ்ய போர் விமானங்களின் குண்டு வீச்சு தாக்குதலால் விமான நிலையங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.  இதனால் உக்ரைன் நாட்டில் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.   இதையொட்டி நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், “ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  இது ஐரோப்பியக் கண்டத்தில் … Read more