யார் இந்த சஞ்சீவ் சன்யால்.. மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பு!

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் முழு நேர உறுப்பினராக சஞ்சீவ் சன்யால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சஞ்சீவ் சன்யால்? இவரின் அனுபவம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். தற்போது மத்திய நிதியமைச்சகத்தின், முதன்மை பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றி வரும் சஞ்சீவ், நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பில் இவரின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் … Read more

சிவகங்கை: நகராட்சித் தலைவர் ரிமோட் பாம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை!

15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே அதிரவைத்த சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில், இன்று குற்றவாளிகளை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கொலை தி.மு.க உட்கட்சி பிரச்னையால் 2007-ல் நடந்த நகராட்சித் தேர்தலில், கட்சித்தலைமை முருகன் என்பவருக்கு சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத நிலையில், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், பெரும்பாலான தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவில் முருகன் நகராட்சித் தலைவரானார். இதனால் சிவகங்கை நகர தி.மு.க-வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2007-ம் ஆண்டு ஜூன் … Read more

ரஷ்யாவுடனான மோதலில் ஐரோப்பிய பாதுகாப்பின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்! உக்ரைன் அதிபர்

 ஐரோப்பிய பாதுகாப்பின் எதிர்காலம் ரஷ்யாவுடனான தனது நாட்டின் மோதலில் தீர்மானிக்கப்படும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் Kyiv-ல் பேசிய வோலோடிமிர் ஜெலன்ஸ்கி , Donetsk மற்றும் Luhanskநகரங்களை சுதந்திரமாக அங்கீகரித்த ரஷ்யாவின் முடிவு, உக்ரைனுக்கு எதிரான மற்றொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று விவரித்தார். ரஷ்ய கூட்டமைப்பின் குற்றங்கள் பற்றிய எங்கள் மதிப்பீட்டில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம்.இது உக்ரைனுக்கு எதிரான மற்றொரு ஆக்கிரமிப்புச் செயலாகும். Donbas-ன் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் ரஷ்ய இராணுவம் பிரிவினைவாதிகள் … Read more

பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால்  தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை நமது மாநிலம்  அடைந்துள்ளது.  இதை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளைப் போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே, பெற்றோர்கள் மத்திய மாநில அரசுகள்  ஒவ்வொரு வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைத்து வருகிறது. தமிழக மருத்துவம் … Read more

தமிழகத்தில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு- தமிழக அரசு

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும்வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்கக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. அதன்படி, தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். … Read more

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் மற்றும் உடமைகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் மற்றும் உடைமைகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் அவசரமாகத் தலையிட வேண்டும் எனவும் … Read more

மல்லையா போன்றோரிடமிருந்து ரூ.18,000 கோடி மீட்பு: மத்திய அரசு| Dinamalar

புது டில்லி: வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடமிருந்து ரூ.18,000 கோடியை மீட்டு வங்கிகளுக்கு அளித்திருப்பதாக உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணமோசடி வழக்குகளில் அமலாக்கத் துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அம்மனு விசாரணையில் உள்ளது. அதில் அரசுக்கு எதிராக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோகத்கி உள்ளிட்ட பல … Read more

உத்தரபிரதேச தேர்தல்; 200 துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாக்களித்தார் மந்திரி அஜய் மிஸ்ரா!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட சட்டசபை  தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.  இந்த நிலையில்,உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி … Read more

இந்திய மக்களை வாட்டிவதைக்க போகும் ரஷ்யா-உக்ரைன் பிரச்சனை..!

ரஷ்யா பல ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து இரு பகுதிகளைக் கைப்பற்றியதை அடுத்த அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தகம், பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. தற்போதைய நிலையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராகி இருப்பதாக அறிவித்திருந்தாலும் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை மூலம் இந்திய மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். ரஷ்யா கைப்பற்றிய 2 … Read more

உக்ரைனிலிருந்து வெறும் 20 கிலோமீட்டரில் ரஷ்ய படைகள் – அதிர்ச்சி தரும் செயற்கைக்கோள் படங்கள்!

ரஷ்யா-உக்ரைன் விவகாரமானது எப்போது வேட்மண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழ்நிலையிலேயே இருப்பதாக அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், கடந்த திங்கள்கிழமை, ரஷ்யாவின் அண்டை நாடுகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய குடியரசுகளின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்திருந்தார். இது உக்ரைனில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாக்ஸர் எனப்படும் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் உக்ரைனுக்கு அதிர்ச்சி தரும் வகையிலான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. உக்ரைன் … Read more