அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.   இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். … Read more

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை : நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு, வாக்குரிமை மறுக்கப்பட்டதாக சங்க உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

வியாபாரிகளுக்கு ஆலோசனை கூட்டம்| Dinamalar

பெங்களூரு:கர்நாடக மாநில முறுக்கு வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி, ஆலோசனைகள், தொழில் கடன் வழங்குவது குறித்த கூட்டம் பெங்களூரு தமிழ் சங்கத்தில், இன்று முதல் வரும் 25 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.தினமும், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.மேலும் விபரங்களுக்கு சங்க தலைவர் தமிழரசன் 91595 55110, 98800 29401 என்ற மொபைல் எண்ணில் … Read more

அசத்தலான அஞ்சலக திட்டம்.. PPFல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அஞ்சலகத்தின் சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினை அஞ்சலகத்தில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். வங்கியிலும் தொடங்கிக் கொள்ளலாம். இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இந்தியர்களான யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆகும். இது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அரசால் மாற்றம் செய்யப்படுகின்றது. ரஷ்யா கைப்பற்றிய 2 உக்ரைன் பகுதிகள் மீது ‘நிதியியல் தடை’.. அமெரிக்கா அதிரடி..! முதலீடு? இந்த திட்டத்தில் … Read more

ஒரு ஓட்டுக்கூட பெற விடாமல் அதிமுக-வை தோற்கடித்த சுயேச்சை! -வென்றதும் அதே கட்சியில் இணைந்த சுவாரஸ்யம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராம்ஷா, சுயேச்சையாக பிரதிவிராஜா மற்றும் இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கினர். இதில், சுயேச்சையாகக் களமிறங்கிய பிரிதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றியை வசப்படுத்தினார். 149 வாக்குகள் வாங்கிய திமுக பரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இப்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்குப் பதிவான … Read more

சுவிட்சர்லாந்து செல்ல வேண்டுமா? தற்போதையை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள்

சுவிட்சர்லாந்திற்கு வருபவர்கள் கடுமையான நுழைவு விதிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் மொத்தம் 2,653,056 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 12,553 பேர் இறந்துள்ளனர். இத்தகைய புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், சுவிட்சர்லாந்தில் உள்ள அதிகாரிகள் பிப்ரவரி 17 அன்று வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட பெரும்பாலான கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கினர். பிப்ரவரி 17 முதல் பயண விதிகள் தளர்த்தப்படும் என்று சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் வெளியிட்ட … Read more

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய நாட்டுக்குச் சென்றுள்ளார்.  அவர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.  இம்ரான் கானிடம் ரஷ்ய ஊடகமான ரஷ்யா டுடே செய்தியாளர் சந்திப்பு நடத்தி உள்ளார்.   அப்போது அவரிடம் இந்தியாவுடனான உறவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இம்ரான் கான், “எங்களுக்கு இந்தியா … Read more

உக்ரைன் விவகாரம் – ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம்

டோக்கியோ: உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகன்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக அதிபர் புதின் நேற்று அறிவித்தார். அங்கு ரஷ்ய படைகள் நுழைவதற்கு உத்தரவிட்டதால் அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், … Read more

பிப்-23: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஒரு ஓட்டு கூட பெறாத ச.ம.க., வேட்பாளர்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி 25 வது வார்டில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நகர செயலாளர் சதீஷ்குமார் போட்டியிட்டார். அந்த வார்டில் இவருக்கு ஓட்டு இல்லை. தேர்தலில் சதீஷ்குமார் ஒரு ஓட்டு கூட பெறவில்லை.மேலும் 3 வது வார்டில் அ.ம.மு.க. மாயகிருஷ்ணன், 11 வது வார்டில் பா.ஜ., செந்தில்குமார் ஆகியோர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றனர். … Read more