நிதி செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்| Dinamalar

மும்பை:”நிதித் துறை செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,” என, நிதி கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலின், 25வது உயர்மட்டக் குழு கூட்டம், மும்பையில், நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:நிதிச் சந்தை ஸ்திரமாக செயல்பட வேண்டும். இதற்கு எதிராக உருவாகும் சவால்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக உக்ரைன் பிரச்னை, இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக உள்ள கச்சா எண்ணெய் விலை … Read more

அம்பானி முதல் பிர்லா வரை.. இந்திய பணக்காரர்களின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..?

இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்புக் கொரோனா தொற்றுக் காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் பெரும்பாலான பணக்காரர்கள் தங்களது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளனர். இந்தத் திடீர் வர்த்தக விரிவாக்கத்திற்கு ஒருபக்கம் சந்தையில் புதிதாகப் பல வர்த்தக வாய்ப்புகள் உருவாகியிருந்தாலும், இதேவேளையில் பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் வர்த்தகத்தைத் தனியாக நிர்வாகம் செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ள காரணத்தால் நாட்டின் முன்னணி பணக்காரர்கள் கடந்த 10 வருடத்தில் இல்லாதது போல் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் … Read more

Apple ஸ்டோரில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்., பிரபல ஐரோப்பிய நாட்டில் பரபரப்பு

நெதர்லாந்தில் உள்ள Apple Store ஷோரூமில் துப்பாக்கியுடன் நுழைத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடைக்குள் இருந்த ஒருவரை பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், Leidseplein பகுதியில் உள்ள Apple Store ஷோரூமில் உள்ளூர் நேரப்பபடி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தின் சில காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வாடிக்கையாளர் என … Read more

இலங்கையுடனான டி20 தொடர் – சூர்யகுமார், தீபக் சாஹர் காயத்தால் விலகல்

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா ஒருநாள் தொடரி 3-0 எனவும், டி20 தொடரை 3-0 எனவும் முழுமையாக கைப்பற்றியது. இதற்கிடையே, இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் … Read more

மெட்ரோவில் முக கவசம் கட்டாயம்| Dinamalar

பெங்களூரு:மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாதோருக்கு நிறுவனத்தின் சார்பில் அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்தியுள்ளனர்.மற்ற போக்குவரத்து வாகனங்களை விடவும், மெட்ரோ ரயிலில் வசதி இருப்பதால் பயணியர் முன்னுரிமை அளிக்கின்றனர்.மெட்ரோ ரயில் பெட்டிகளில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருப்பதால், சுவாச பாதிப்பு இருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர். இருப்பினும் குறைவான துாரம் மட்டுமே பயணிப்பதால் சமாளிக்கின்றனர். சுவாச பிரச்னை இருப்போர் பலரும், மெட்ரோவில் செல்லும் போது முககவசம் அணியாமலும், முகத்தில் பாதி வரை அணிந்தும் செல்கின்றனர். அடைக்கப்பட்ட சூழலில் நோய் பாதிப்புக்கான தீவிரம் அதிகமாக … Read more

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சோகம்.. 18 மாத DA நிலுவை பெறுவதில் தாமதம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) அளவீட்டை கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு அடுத்தடுத்து மத்திய அரசு உயர்த்திய வந்த நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது. மத்திய அரசின் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 18 மாதத்திற்கு அகவிலைப்படியை (DA) பெற்ற காத்திருக்கின்றனர். இந்த அரியர் தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்துத் தற்போது … Read more

ஃபீல்டர் கண்ணத்தில் ஓங்கி அறைந்த பவுலர்! பாக். சூப்பர் லீக் போட்டியில் பரபரப்பு

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கைக்கு வந்த கேட்ச் சரியாக பிடிக்கவில்லை என ஃபீல்டர் கண்ணத்தில் பவுலர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 2022-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அலேக்ஸ் ஹேல்ஸ், பால் ஸ்டெர்லிங் ஆகிய வீரர்கள் திடீரென்று விலகியது, ஜேம்ஸ் பால்க்னர் சம்பளம் கொடுக்கவில்லை எனக் கூறியது என பஞ்சம் இல்லாமல் அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பிவருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் … Read more

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு

கடலூர்: வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிந்துள்ள வாக்குகளை எண்ணும் பொது இந்திய்ரத்தின் திரையிடும் பகுதி பழுதின் காரணமாக மேற்படி கட்டுபாட்டுக் கருவியினை பெல் நிறுவனத்தை சார்ந்த பொறியாளர்கள் பழுது பார்த்தும் குறைவினை … Read more

உக்ரைனில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. அந்நகரங்களில் படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால், அந்தப் … Read more

பழனி நகராட்சியை மீண்டும் கைப்பற்றியது திமுக

பழனி: பழனி நகராட்சியை திமுக மீண்டும் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 20 வார்டுகளில் வெற்றி பெற்றது. பழனி 12-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சின்னத்தாய் மற்றும் விசிக வேட்பாளர் முருகேசன் 500 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க குலுக்கல் முறையில் சுட்டு குலுக்கி போடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட விசிக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.