பாரதிய ஜனதா கைப்பற்றிய மாநகராட்சி வார்டுகள்- முழு விவரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. தனித்து நின்ற பா.ஜனதாவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் 21 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அதன் முழு விவரம் இதோ.. 1-கடலூர்-கடலூர்-வார்டு 28- ஜி சக்திவேல் 2-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 12- எம். சுனில் குமார் 3-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 13- வ. ஆச்சியம்மாள் 4-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 20- அ. ஆனேறோனைட்சினைடா 5-கன்னியாகுமரி-நாகர்கோவில்-வார்டு 24- தி. ரோஸிட்டா … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு: சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் 178 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. திமுக 153 வார்டுகளிலும், காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் , விசிக தலா 4 , மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 15 வார்டுகளிலும், அம,முக 1, பாஜக 1, சுயேட்சை 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

பஜ்ரங் தள் பிரமுகர் கொலை வழக்கு: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாக போலீஸ் தகவல்

சிவமொக்கா, கர்நாடகா மநிலம் சிவமொக்காவில் பஜ்ரங் தள் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே, ஹிஜாப் விவகாரம் உள்பட அனைத்து கோணங்களிலும் இந்த கொலை வழக்கில் விசாரணை நடப்பதாக கர்நாடக உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.  மேலும் உள்துறை மந்திரி  அரக ஞானேந்திரா கூறுகையில்,  ஹிஜாப் சர்ச்சைக்கு பின்புலத்தில் உள்ள அமைப்புகளுக்கு இந்த கொலையில் தொடர்பு … Read more

எல்ஐசி ஐபிஓ.. PMJJBY பாலிசிதாரர்களுக்கும் சலுகை கிடைக்கும்..!

எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடானது இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக எல்ஐசிபாலிசி தாரர்களுக்கு, மொத்த பங்கு வெளியீட்டில் 10% ஒதுக்கீடு செய்யப்படலாம். மேலும் பாலிசிதாரர்களுக்கு பங்கு விலையில் 5% தள்ளுபடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சலுகைகள் கிடைக்கும் இதற்கிடையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமும், எல்ஐசி பங்கு வெளியீட்டின் போது கொடுக்கப்படும் சலுகைகளுக்கு பொருந்தும் என எல்ஐசி-யின் தலைவர் எம் … Read more

ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் திமுக கவுன்சிலர்கள்? – என்ன நடக்கிறது நெல்லையில்?

நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக 48 பேரும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏழு பேர் என 55 வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 51 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க மட்டும் தனியாக 44 வார்டுகளில் வென்றிருக்கிறது. அதனால் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் சார்பில் மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையம் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உடனடியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். பெரும்பாலான வேட்பாளர்கள் … Read more

திருமண நிகழ்வில் நடந்த சோகம்! 14 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்

இந்தியாவின் உத்தரகாண்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உத்தரகாண்டின் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை சம்பவத் மாவட்டம் அருகே உள்ள, சுக்கிதங்க் மலை பகுதியில் எதிர்பாராதவிதமாக வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது. படுகாயமடைந்த வாகனத்தின் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விபந்து நடந்த பகுதிக்கு … Read more

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – 3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் கட்சி. 73 மாநகராட்சி, 151 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வாக்களித்த மக்களுக்கு எங்களது நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு … Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வென்ற 2 வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியில் சுயேட்சையாக வென்ற கீதா முருகேசன், சுப்பு லட்சுமி ஆகியோர் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 60 வார்டுகளை கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியில் திமுகவின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க.,வின் மக்கள் பணி தொடரும்: பழனிசாமி உறுதி| Dinamalar

சென்னை: ‘அ.தி.மு.க., தொடர்ந்து மக்கள் பணியில், தன்னை முழுமையாக அர்ப்பணித்து பாடுபடும்’ என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஒட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி. மாற்று அணியினர் பல வகை முயற்சிகளுக்கு மயங்கி விடாமல், தெளிவான சிந்தனையுடன், ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு ஓட்டளித்து உள்ளீர்கள். உங்கள் அன்பும், ஆதரவும், கட்சியின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் வணக்கமும், நன்றியும் … Read more