மேற்கு வங்காள ஆளுநரை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும், முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில், மேற்கு வங்காள ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தங்கரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ராமபிரசாத் சர்கார் தாக்கல் செய்த ரிட் மனுவில், ஆளுநர் ஜக்தீப் தங்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார். அவர் பா.ஜ.க.வின் குரலாக பேசி வருகிறார். இதனால் ஜக்தீப் தங்கரை … Read more

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில், மாசி மக தெப்ப உற்சவ விழா விமர்சையாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ள  ஏரிகாத்த ராமர் என்கிற கோதண்டராமர் கோயில் மாசி மகம் தெப்ப உற்சவ விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையாட்டி, மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கருணாகர பெருமாள் எழுந்தருளி வலம் வந்தார். அதில், மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து … Read more

தங்கம் விலை உயர இந்தியாவும், சீனாவும் தான் காரணம்.. 2021 நிலைமையைக் கொஞ்சம் பாருங்க..!

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகச் சந்தைக்கு ஏற்ப இல்லை, இதற்கு இந்தியாவும், சீனாவும் முக்கியக் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.. ஆனால் அது தான் உண்மை. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கம், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு, ரஷ்ய உக்ரைன் பிரச்சனை, பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை, நாணய மதிப்புச் சரிவு எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலை இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1900 டாலரை தாண்டியுள்ளது. … Read more

உக்ரைன் நகரை உலுக்கிய கார் வெடிகுண்டு தாக்குதல்! மக்கள் வெளியேற்றம்.. ரஷ்யாவின் சதித்திட்டம்?

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள Donetsk நகரத்தில் பயங்கர கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ரஷ்ய தாக்குதலின் தொடக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ரஷ்ய படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்யா ஆக்கிரமிப்பு நகரங்களான Donetsk மற்றும் Luhansk-ல் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு, அதனை ஆளும் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டனர். மக்களை அங்கிருந்து வெளியேறி எல்லையைக் கடந்து ரஷ்யாவிற்குள் நுழையுமாறு வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், … Read more

ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுப்பு- பணியை ராஜினாமா செய்த விரிவுரையாளர்

தும்கூர்: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், விரிவுரையாளர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் கர்நாடகாவின் தும்கூரில் நடந்துள்ளது. ஜெயின் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரியில் கற்பித்த கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர், வகுப்புகளை நடத்தும் போது ஹிஜாபை அகற்றுமாறு கல்லூரி கூறியதை அடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவில், தன்னை சாந்தினி என்று அடையாளம் காட்டிய விரிவுரையாளர், “நான் ஜெயின் பியூ கல்லூரியில் மூன்று … Read more

ரஞ்சிக் கோப்பை – அறிமுக ஆட்டத்தில் முச்சதம் அடித்து சாதித்த முதல் வீரர் சகிபுல் கனி

கொல்கத்தா: ரஞ்சிக் கோப்பை ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் நடந்து வரும் போட்டியில் பீகார், மிசோரம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பீகார் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மங்கல் மாரோர் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ரிஷாவ் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய லக்கன் ராஜா 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய பாபுல் குமார், … Read more

பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி மின்வாரிய உயர் அதிகாரி படுகாயம்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம்,  செய்யாறு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அருள்மொழி(54). இவர் நேற்று சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அருள்மொழி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர் 7 நிமிடங்களில் ஏழையானார்| Dinamalar

லண்டன் : பிரிட்டனில், உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த ஒருவர், ஏழு நிமிடங்களில், அந்த தகுதியை இழந்த சுவாரஸ்யம் நிகழ்ந்துஉள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசிக்கும் மேக்ஸ் போஷ் என்ற இளைஞர், ‘யு டியூப்’ சேனலில் சுவாரஸ்யமான செய்திகளை தருவதில் வல்லவர். இவருக்கு, யு டியூப் சேனலில், 6 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். 50 லட்சம் கோடி இந்நிலையில், மேக்ஸ் போஷ் திடீரென உலக பணக்காரர்கள் வரிசையில், முதலிடத்தை பிடித்தார். இது குறித்து, மேக்ஸ் போஷ் யு … Read more

டாடாவின் முடிவால் அதிர்ந்து போன விமான நிறுவனங்கள்.. சந்திரசேகரனின் பிரமிக்க வைக்கும் திட்டம்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, இந்த பதவியினை வகிப்பார் என்று சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. சந்திரசேகரன் தலைமையிலான நிறுவனம் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டது. அவரின் செயல்பாடுகள் குறித்து சில தினங்களுக்கு முன்பு நிர்வாக குழு கூட்டத்தில், டாடா குழுமத்தின் கவுரவ தலைவரான ரத்தன் டாடா பெருமிதமாக கூறினார். இந்த நிலையில் தான் சந்திரசேகரனின் பிரம்மாண்ட திட்டமும் வெளியாகியுள்ளது. அப்படி என்ன தான் சொன்னார், வாருங்கள் பார்க்கலாம். சந்திரசேகரன் … Read more