பஞ்சாப்: `முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் நீக்கப்பட்டது இதனால்தான்…' – ரகசிய உடைத்த ராகுல்!

2017-ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தவர் பஞ்சாப்பின் அமரீந்தர் சிங். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும் அமரீந்தர் சிங் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அமரீந்தர் சிங் அறிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை அமரீந்தர் … Read more

உக்ரைனுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யா எடுத்த அதிரடி நடவடிக்கை! எதிர்வினையாற்ற தயாராகும் அமெரிக்கா

 உக்ரைன் உடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க துணை தூதர் பார்ட்லே கோர்மனை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் Jason Rebholz மேற்கோள் காட்டி RIA இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் (டிசிஎம்) பார்ட் கோர்மனை ரஷ்யா வெளியேற்றியது. கோர்மன் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதருக்குப் பிறகு இரண்டாவது மிக மூத்த அதிகாரி மற்றும் தூதரகத்தின் மூத்த தலைமையில் … Read more

கீழடியில் தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிப்பு

மதுரை: கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் 8 ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். முன்னதாக, கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடக்க உள்ள இடத்துக்கு பாதை வழங்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் விவசாயம் … Read more

தமிழகத்தில் மேலும் 1,252 பேருக்கு கொரோனா பாதிப்பு- 6 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 1,310 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 41 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் … Read more

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த வழக்கில் மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. களத்தூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சொத்தை அண்ணனுக்கு எழுதிவைத்ததால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்துள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.6% ஆக சரிவு.. ஹரியானா மோசம்.. தெலுங்கான டாப்பு..!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் வேகமாக குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான துறையின் முன்னணி நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை பெற துவங்கியுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு சந்தையும் தொடர்ந்து மீண்டு வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தப்படாத துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதன் வாயிலாக நாட்டின் வேலைவாய்பின்மை ஜனவரி மாதத்தில் சரிந்துள்ளது. 4 நாள் மட்டுமே வேலை, அதே சம்பளம்.. ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ஜனவரி மாதம் … Read more

`சுப நிகழ்ச்சிக்கு ஷாமியானா; துக்க நிகழ்வுக்கு ஐஸ் பாக்ஸ்' – அமமுக வேட்பாளரின் `அடடே' வாக்குறுதிகள்!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. பிரசாரத்தின் போது, பல்வேறு அரசியல் கட்சியினரும் புதுமையான வகையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு, மக்களை கவர்ந்தனர். பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களாக இருந்தால், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை வசீகரிக்க தாங்கள் வெற்றிப் பெற்றால், பேருந்து நிலையம், கல்லூரி, தொழிற்சாலை உள்ளிட்டவைகளை கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். அதே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை … Read more

ஒத்துழைக்காவிட்டால் ரஷ்யாவுக்கு இது தான் கதி! ஜேர்மன் எச்சரிக்கை

 உக்ரைன் உடனான பதற்றத்தை தணிக்க ஒத்துழைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிம் என ரஷ்யாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளையும் ஆயுதங்களையும் குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனால், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, சமீபத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்ட அதன் சில படைகள் முகாமிற்கு திரும்பியுள்ளதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில், உக்ரைன் … Read more

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டினருக்கும் அனுமதி இல்லை

கொழும்பு இலங்கை மற்றும் தமிழக பக்தர்களுக்குக் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தற்போது இலங்கைக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அது ஒரு காலத்தில் இந்திய நாட்டின் பகுதியாக இருந்தது.   இங்கு வருடா வருடம் நடைபெறும் அந்தோணியார் திருவிழாவுக்குத் தமிழக மீனவர்கள் சென்று வழிபடுவது வழக்கமாகும்.   அந்த விழாவில் இலங்கை மீனவர்களும் கலந்துக் கொள்வார்கள். கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் மேலும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாலும் … Read more

ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?- ரோகித் சர்மா விளக்கம்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது சிலரை முனுமுனுக்க வைத்தது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் … Read more