பிரித்தானியாவில் இனரீதியாக தாக்கப்பட்ட இலங்கை வம்சாவளி சிறுவன்

லண்டனில் வசித்துவரும் 12 வயது இலங்கை வம்சாவளி சிறுவன் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆனபிறகும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதால் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனும் அவரது குடும்பத்தினரும் மனம் திறந்துள்ளனர். பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சதி பாலகுரு (Sathi Balaguru). அவர் 2020 ஆக்டொபரில் மேற்கு லண்டனில் உள்ள Pitshanger FC கால்பந்து அணிக்காக ஒன்பது … Read more

இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவு : வெளியாட்கள் வெளியேற உத்தரவு

சென்னை இன்று மாலை  6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அந்தந்த வார்டுகளில் இருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு இடப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்திலுள்ள  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 12,838 வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நடக்கிறது.  இதில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மொத்தம் … Read more

அவர் என்னை காலா என்று அழைக்கிறார் – சரண்ஜித் சிங் சன்னி குறித்து கெஜ்ரிவால் புகார்

மொஹாலி: பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மக்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதைத் தடுக்குமாறு அவர் ( பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) வேண்டுகோள் விடுக்கிறார். அவர் என்னை கலா (கருப்பு) என்று அழைக்கிறார்.  … Read more

பிப்-17: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

LIC பங்கு விற்பனை கன்பார்ம் ஆகிடுச்சு.. அடுத்தது IDBI வங்கியா.. மோடி அரசின் அடுத்த திட்டம் என்ன?

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையானது இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக ஐடிபிஐ வங்கியின் (IDBI bank) பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் விர்சுவல் மூலமாக அடுத்த வாரம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விர்சுவல் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. எல்ஐசி IPO.. பங்கு விலை ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம்.. ரெடியாகிகோங்க..! யாரிடம் எவ்வளவு பங்கு? ஐடிபிஐ … Read more

பஞ்சாப்: `தேர்தல் நடத்தை விதிகள்… ரூ.449.55 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!’ -தேர்தல் ஆணையம்

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 20-ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை வெளியிட்ட நாளிலிருந்தே, அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடத்தில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் அளிக்கக்கூடாது, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடங்களைச்சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் பிரசாரம் நடத்த தடை, வாக்கு பதிவு நடைபெறும் இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மட்டுமே அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி போன்ற தேர்தல் நடத்தை விதிகள் பஞ்சாப்பில் அமலில் … Read more

ஐபிஎல் ஏலத்தில் அடித்த அதிக தொகைக்கு ஏலம் – வெஸ்ட் இன்டீஸ் வீரர் செய்த சிறப்பான சம்பவம்

ஐபிஎல் ஏலத்தில்   அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இன்டீஸ் வீரர் சக வீரர்களுக்கு விருந்தளித்துள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்தன.  அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.10.75 கோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் எடுத்தது.ஐபிஎல் … Read more

ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசு, கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே சாதி, மத வேறுபாடுகளை தவிர்க்க மதஅடையாள சின்னங்களுடன் கல்வி நிலையங்களுக்கு வர தடை விதித்துள்ளது. இதன்படி, கர்நாக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது .கல்லூரியின் இந்த தடைக்கு எதிராக நம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்:இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

சென்னை: தமிழகத்தில்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,866,885 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,866,885 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 417,885,540 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 338,396,416 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,604 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.