அதிமுக வேட்பாளர் தற்கொலை : காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காஞ்சியில் 51 வேட்பாளர்களை அறிமுகம் அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த நிலையில் ஜானகிராமன் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு அலுவலர் நியமனம்| Dinamalar

பெங்களூரு-அபராதம் செலுத்தாமல் ஏமாற்றியவர்களிடம் கட்டணத்தை வசூலிக்க, மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாகன விதிமீறல், சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.ஆனால் பலரும் அபராத கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றி விடுகின்றனர்.அவர்களிடம் அபராத கட்டணத்தை வசூலிக்க முதற்கட்டமாக நான்கு மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு உதவி எஸ்.ஐ., தரத்தில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரின் பத்தரஹள்ளி, கஸ்துாரிநகர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, ெஹச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு கிழக்கு மண்டல போக்குவரத்து … Read more

மத்திய படையினர் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்கு: மாநிலங்களவையில் தகவல்

புதுடெல்லி,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி நித்யானந்த்ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள்:- * 7 மத்திய போலீஸ் படைகளில் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. * 181 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. * அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையினர் மீது 481 மீதும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 273 பேர் மீதும் கிரிமினல்-ஊழல் வழக்குகளும் போடப்பட்டுள்ளன. … Read more

ஐடி துறைக்கு பாதிப்பா..?! 22 வருடத்திற்குப் பின் மீண்டும் டாட்காம் பபுள் வெடிக்கப்போகிறதா..?

உலகளவில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிகம் லாபம் பார்த்த டெக் துறையில் தற்போது பல புதிய டெக்னாலஜி வந்தாலும், அனைத்து வர்த்தகச் சந்தையிலும், அனைத்து நிறுவனங்களும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை வாடிக்கையாளர்கள் இழப்பு. 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு.. அமெரிக்கா ஆதிக்கத்தை காட்டியது..! இந்தப் பிரச்சனை தான் தற்போது பேஸ்புக் நிறுவனத்தை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கடந்த 20-22 வருடத்தில் யாரும் பார்க்காத ஒரு மோசமான தருணமான டாட் காம் பபுள்-ஐ விரைவில் பார்க்கப்போகிறோம். … Read more

நள்ளிரவில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு! – ஒருவர் கைது

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்நேரத்தில் பாஜக தலைமை அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் மூலம் குண்டு வீசப்பட்டு உள்ளது. கமலாலயம் இதனிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் … Read more

இவரைப் பற்றிய ரகசிய தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டொலர் பரிசு! அமெரிக்கா அறிவிப்பு..

ஐ.எஸ்.ஐ.எஸ்- கே தலைவன் குறித்து ரகசிய தகவல் கொடுபவருக்கு 10 மில்லயன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்- கே (Islamic State – Khorasan) பயங்கரவாத அமைப்பின் தலைவன் சனாவுல்லா கபாரி (Sanaullah Ghafari) குறித்து தகவல் தருவோருக்கு, 10 மில்லியன் டொலர் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 26, 2021 அன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் – கொராசன் பயங்கரவாத அமைப்பு … Read more

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இரண்டு வாரம் தடை!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்த இரண்டு வாரங்கள் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் கமல்பண்ட் உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு நகரில் உள்ள பள்ளி வாசல், பியு கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் மற்றும் அதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு 200 மீட்டர் சுற்றளவில் எந்தவிதமான கூட்டங்கள், போராட்டம் அல்லது போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஒரே சீருடை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து, உடுப்பியில் … Read more

எஃப்.ஐ.எச்.புரோ லீக் ஹாக்கி போட்டி – தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

போட்செஃப்ஸ்ட்ரூம்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா,  தென்னாப்பிரிக்காவை எதிர் கொண்டது. விறுவிறுப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அடுதடுத்து கோல் அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.  இந்திய இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து மூன்று கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்திய வீரர்கள் குர்சாஹிப்ஜித் சிங் ,தில்ப்ரீத் சிங்  ஹர்மன்பிரீத் சிங் , அபிஷேக் , … Read more

பிப்-10: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

புதுச்சேரி கலால் வருவாய் 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது| Dinamalar

புதுச்சேர-புதுச்சேரி கலால் வருவாய், முதல் முறையாக 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடைகள்-50, சாராயக்கடைகள்-80, மதுபான கடைகள்-284 என மொத்தம் 414 கடைகள் உள்ளன.மாநிலத்தின் வருவாய், கலால் துறையை பெரிதும் சார்ந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல், கலால் வருவாயை பெரிதும் பாதித்தது.கடந்த 2019-20 ம் ஆண்டு கலால் வருவாய் 857 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 81.70 கோடி ரூபாய் அளவிற்கு சாராயம் விற்பனையாகி இருந்தது. 2020-21 ம் ஆண்டில் கொரோனா தொற்று … Read more