நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் பரப்புரையை தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கியுள்ளார். நீட் தேர்வு எழுத லட்ச கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெற ஏழை, எளிய மாணவர்களால் முடியாது. பணமும் வசதி படைத்தவர்களுக்கு கொண்டுவரப்பட்டது தான் நீட் தேர்வு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டால், பொறியியல் கல்லூரிகளுக்கும் அதை கொண்டு வருவார்கள் என முதல்வர் கூறினார்.

ஆசியாவிலேயே இனி அதானி தான் நம்பர் 1.. அம்பானி-க்கு எந்த இடம்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரராக முன்னேறியுள்ளார், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி. இது குறித்து ப்ளூம் பெர்க் ஆய்வில், துறைமுகங்கள், சுரங்கங்கள், புதுபிக்கதக்க ஆற்றல் உள்ளிட்ட வணிகங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வரும் கெளதம் அதானியின் சொத்து மடங்கு பலமடங்கு அதிகரித்துள்ளது. 5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..! இந்தியாவின் இரு பெரும் தொழிலதிபர்களான அம்பானியும், அதானியும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளை செய்து … Read more

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர ரஜினி போட்ட திட்டம்! கசிந்த தகவல்

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தலான திட்டத்தை கையில் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை … Read more

அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் 28 பேர் விடுவிப்பு! சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

அகமதாபாத்: அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என்றும் 28 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகாததால், அவர்களை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி  தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரத்திற்குள் 21 இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பில், 51 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் … Read more

காஷ்மீர் குறித்து ஹூண்டாய் சர்ச்சை கருத்து – தென்கொரிய தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்திய வெளியுறவுத்துறை

புதுடெல்லி: பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினம் என பிப்ரவரி 5-ம் தேதியை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட பதிவு, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. கடந்த 5-ம் தேதி பாகிஸ்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீரி சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்கள் தொடர்ந்து வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இதற்கிடையே, ஹூண்டாய் … Read more

தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கூறினார்.

பெங்களூரு மருத்துவமனைகளில் மீண்டும் தோல் தானம்| Dinamalar

பெங்களூரு-பெங்களூரு மருத்துவமனைகளில் மீண்டும் தோல் தானம் எண்ணிக்கை, வழக்கத்துக்கு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்து மற்றும் பல்வேறு காயங்களால் தோல் சிதைந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தானம் செய்வோர் தோல் பயன்படுத்தப்படுகிறது.கண், ரத்தம் போல தோல் தானமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விருப்பமுள்ளோர், மருத்துவமனைகளில் பதிவு செய்கின்றனர்.இறந்த பின், அவர்களின் உடலின் குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் தோல் எடுத்து மருத்துவமனைகள் பதப்படுத்துகின்றன.பெங்களூரில் அதிகமான தோல் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கலான சூழலை சமாளிக்க வேண்டியிருந்தது.கொரோனாவால் … Read more

5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி..!

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் திங்கட்கிழமை 93 டாலரில் தாண்டி 94 டாலரை நெருங்கியது, ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த சில வருடங்களாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேர்தல் நடக்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வருகிறது. இதேபோல் தற்போது 5 மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரு … Read more