ஐசிசி யு-19 உலக கோப்பை பைனல்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

ஆன்டிகுவா: ஐசிசி யு-19 உலக கோப்பை பைனலில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆன்டிகுவாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

முதல் வாரத்தில் ராஜ்யசபாவில் பணிகள் சுமூகம்: அவை தலைவர் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் முதல்வாரத்தில் முதல் 3 நாட்கள் எந்தவித அமளியும் ஒத்தி வைப்பும் இல்லாமல் பணிகள் 100 சதவீதம் நடந்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவை தலைவர் வெங்கையா நாயுடு, வரும் நாட்களிலும் இதே போன்ற சூழ்நிலை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31 அன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. தொடர்ந்து 1 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ராஜ்யசபாவில், … Read more

டாடா மோட்டார்ஸ் கொடுத்த ஆஃபர்.. கார் பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. இது ஷேர் விலையில்?

இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமமத்தினை சேர்ந்த, முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் வாகன விற்பனையை செய்துள்ளது. இது வரவிருக்கும் மாதங்களிலும் வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகின்றது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். முதல் கட்டமாக மற்ற வாகன நிறுவனங்கள் விலையை அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் வாகனங்களின் விலையில் சலுகையினை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். டாடாவுக்கு ஏற்பட்ட பலத்த நஷ்டம்.. … Read more

உ.பி: `ரூ.1.5 கோடி சொத்து… சொந்தமாக கார் இல்லை' – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் யோகி!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அதனால், அங்கு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாணப் பத்திரத்தில், 6 வங்கிக் கணக்குகளில் ரூ.1,54,94,054 ரொக்கமும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போனும், ரூ.1 லட்சம் மதிப்புடைய கைத்துப்பாக்கியும், ரூ.80,000 ஆயிரம் மதிப்பிலான ரிவால்வரும், ரூ.49,000 … Read more

வீட்டுக்குள் மர்மநபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்! சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் பரபரப்பு புகார்

சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார் என இரண்டாவது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் முன்னர் எம்.பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து அவரின் 2வது கணவர் ராமசாமி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார். இதையடுத்து விசாரணை … Read more

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை – ராகுல் கண்டனம்

கர்நாடகா: பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கண்டிக்கும் வகையில், தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். … Read more

லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்  திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.  இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் … Read more

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு..!!

டெல்லி: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலவே மீதமுள்ள நாட்களிலும் அவையை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக கல்லூரி மாணவரின் சூட்கேஸ் பெட்டிக்குள் காதலி| Dinamalar

உடுப்பி: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், விடுதிக்கு வந்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரின் ‘சூட்கேஸ்’ பெட்டிக்குள், அவரது காதலியான மாணவி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உடுப்பி மாவட்டம் மணிபால் அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விடுதியில் தங்கியுள்ளனர். சமீபத்தில் அவர்களில் ஒருவர் மிகப்பெரிய சூட்கேஸ் உடன் விடுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து, அதில் என்ன இருக்கிறது என … Read more

சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு.. தடுமாறும் தங்கம் விலை .. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு!

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1852 டாலர்களை தொட்ட நிலையில், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. மாறாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. பேங்க் ஆப் இங்கிலாந்து பேங்க் ஆப் இங்கிலாந்து கடந்த வாரத்தில் வட்டி விகிதத்தினை … Read more