தென்காசி: முதுமக்கள் தாழிகளை உடைத்து தங்கப் புதையல் தேடும் கும்பல்? – நடவடிக்கை எடுக்கப்படுமா?!

தென்காசி மாவட்டத்தில் ஜம்புநதி கரையில் கடையம் கிராமம் உள்ளது. வரலாற்றுடன் தொடர்புடைய ஜம்புநதி மற்றும் ராமநதி பாயும் பகுதியில் இருக்கும் இந்தக் கிராமம் பழைமை வாய்ந்தது. இங்கு குப்பைகளை சேமிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் மூன்று ராட்சதக் குழிகள் தோண்டப்பட்டன. உடைந்து கிடக்கும் முதுமக்கள் தாழி குழிகள் தோண்டியபோது மண்ணுக்குள் புதைந்து கிடந்த பானைகள் உடைபட்டுள்ளன. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அவை முதுமக்கள் தாழி என்பது தெரியாததால் சிலவற்றை உடைத்துள்ளனர். இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் … Read more

100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற மீட்பு குழுவினர் நான்கு நாட்களாக போராடும் நிலையில் சிறுவனின் தந்தை சிறிது நேரம் கூட கண் அசராமல் மகனை நினைத்து தவித்து வருகிறார். மொராக்கோவின் Chefchaouenல் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1ஆம் திகதி மாலையில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து 4 நாட்களாக சிறுவனை மீட்க மீட்பு குழுவினர் … Read more

நீட் விலக்கிற்கு அதிமுக ஆதரவு! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்  என துணை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அதிமுக உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக  ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், இன்று … Read more

அரசியல் சட்ட கடமையை கவர்னர் செய்யவில்லை- அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும் என்பதில் நாம் அனைவருமே ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதையொட்டித்தான் ஒற்றுமையாக பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறோம். நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு. 2006-ல் … Read more

'பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளனர்': மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளதாகவும், இத்தகவலை பாகிஸ்தான் மறுப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் பிரதான் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த வாகனத்துக்கான விருதை மத்திய கல்வி அமைச்சகம் பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26ம் தேதி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் மாநிலங்கள் பங்கேற்றன. அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்களில் சிறந்த வாகனத்துக்கான விருதை கல்வித் துறை பெற்றுள்ளது. வேத காலம் முதல் ‘டிஜிட்டல்’ காலம் வரை கல்வித்துறை வளர்ச்சியை சித்தரித்து … Read more

மதுபோதையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பெண்கள்!

கடலூர் மாவட்டத்தையொட்டிய புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளான பாகூர், சோரியாங்குப்பம், முள்ளோடை, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் பார்களுடன் இயங்கி வருகின்றன. இங்கு மது அருந்துவதற்காக கடலூரைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் படையெடுப்பார்கள். அவர்களைக் கவர்வதற்காக இலவச ஆட்டோ மற்றும் டெம்போ சர்வீஸ்களை நடத்துகின்றன அந்த மதுக்கடைகள். புதுச்சேரி அரசு Also Read: விழுப்புரம்: 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோவில் கைது! அவர்களில் பலர் செலவு குறைவதற்காகவும், இயற்கை காற்றுடன் மது … Read more

நடிகர் விஜய் வீட்டில் முதலமைச்சர்! பரபரப்பை கிளப்பிய சம்பவம்

நடிகர் விஜய் வீட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீரென சென்றது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய்யின் பனையூர் இல்லத்தில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து பேசினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, 22ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு … Read more

ஜஸ்டின் லங்கர் ராஜினாமா: ஆஸ்திரேலியா கிரிக்கெட்அணிக்கு புதிய இடைக்கால கோச் நியமனம்,,,

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம் செய்து ஆஸ்திரேய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2018 ஆம் ஆண்டு  ஜஸ்டின் லாங்கர் இருந்து வருகிறார். இவரது பதவி காலம் ஜூன் மாதம் வரை உள்ளது. இதற்கிடையில் அணி வீரர் டேரன்லெமன் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில்  பதவி விலகிய நிலையில், தலைமை … Read more

புத்தக கண்காட்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் ஜனவரியில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 45-வது புத்தக கண்காட்சி வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் 6-ந்தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடக்கிறது. 500 பதிப்பாளர்களுடன் 800 அரங்குகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி … Read more