உக்ரைனில் தவிக்கும் 1,200 மகாராஷ்டிரா மாணவர்கள்; 300 பேர் மட்டுமே தொடர்பில் இருப்பதாக அரசு தகவல்!

ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் 1,200 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களில் 300 மாணவர்களுடன் மட்டும் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வடேதிவார் தெரிவித்துள்ளார். எஞ்சிய மாணவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்கச் செலவு குறைவு என்பதால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் … Read more

குரு பகவானின் இடமாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? நாளைய ராசிப்பலன்

குரு பகவான் பிப்ரவரி 24ம் தேதி அஸ்தங்கம் நிலைக்கு சென்றுள்ளார். ஜோதிடத்தில் குரு பகவான் அஸ்தங்கம் நிலைக்கு செல்வது அசுபமானதாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அது அற்புத பலன்களும், திடீர் திருப்பங்களைத் தரக்கூடியதாகவும், சிலருக்கு அசுப பலன்கள், எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தவகையில் குருபகவானின் இந்த இடமாற்றத்தால் நாளைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more

தேர்தலில் தோல்வியுற்ற ம நீ ம வேட்பாளர் தற்கொலை : கமலஹாசன் ஆறுதல்

திருப்பூர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்று தற்கொலை செய்து கொண்ட ம நீ ம வேட்பாளர் குடும்பத்துக்கு கமலஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள காலேஜ் ரோட் பகுதியைச் சேர்ந்த 55 வயதான மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார்.  இவர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகப் போட்டியிட்டார்.   மணி ரூ.50000 கடன் வாங்கி தேர்தல் செலவு செய்துள்ளார்.   ஆனால் தேர்தலில் அவரால் … Read more

உ.பி 5-ம் கட்ட தேர்தல் நிறைவு- 5 மணி நிலவரப்படி 53.98 சதவீத வாக்குகள் பதிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. நேரம் செல்லச் செல்ல வாக்காளர்கள் வருகை அதிகரித்தது. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவீதம், மதியம் 1 மணி நிலவரப்படி … Read more

ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவு

கீவ்: ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைனுடன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினருக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெருக்கடியான நிலையிலும் நெகிழ்ச்சி.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் உக்ரைனுக்கு $11 மில்லியன் நன்கொடை.. !

உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் மூன்றாம் உலகப்போரே வரலாமோ என்ற அளவுக்கு பதற்றமானது நிலவி வருகின்றது. சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வரும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகின்றது. இதற்கிடையில் பல நாடுகளும் உதவிகளை வாரி வழங்கி வருகின்றன. சில நாடுகள் ராணுவ உபகரணங்களை வழங்கி வருகின்றன. சில நாடுகள் நிதியினையும் வாரி வழங்கி வருகின்றனர். இதே கிரிப்டோ முதலீட்டாளர்கள் 11 மில்லியன் டாலர்காள் நன்கொடையாக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா – … Read more

இராணுவ உடையில் உக்ரைன் அதிபர்… வைரலாகி வரும் புகைப்படம் உண்மையா? பின்னணி என்ன?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் சூழலில் ரஷ்யா, உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உக்கரைனும் தன்னை தீவிரமாக பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனின் குடிமக்களும் போரில் பங்கு கொள்ள முன்வரவேண்டும் என்றும் அதற்குத் தேவையான ஆயுதங்களை அரசு வழங்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் உக்ரைனுக்குள் இராணுவப் படைகளை அனுப்பும் புடினின் முடிவுக்கு எதிராக ரஷ்யர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் … Read more

சிறப்பு படைவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்!

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய சிறப்பு படைவீரர்களுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது சிறப்பு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் டான்பாஸ் பகுதிகளில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய நகரங்களை சுதந்திர பகுதிகளாக மாற்றும் முயற்சியில் அங்குள்ள ரஷ்யா ஆதரவாளர்களுக்கு உதவுவதற்காக ரஷ்ய சிறப்பு படைவீரர்களை ஜனாதிபதி விளாடிமிர் புதின் முதன்முதலில் அனுப்பிவைத்தார். பின்பு ரஷ்ய படைகள் சிறிது சிறிதாக உக்ரைன் பகுதிகளுக்குள் முன்னேறவே, அதை உக்ரைன் மீதான முழுநீள போராக … Read more

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா

சென்னை: நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் பாடகியுமான நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனை அவருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.