தலைப்பு செய்திகள்
இன்றைய ராசி பலன் | 20/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope | #Rasipalan | #Horoscope #Raasi #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link
பாகிஸ்தான் PSL கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் போஸ்டர்!
பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவரது ரசிகர் ஒருவர் வைத்திருந்த போஸ்டர், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும், அவர் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் இந்திய டெஸ்ட் அணியின் … Read more
இந்தியாவின் ஐஐடி கல்வி நிலையத்தின் முதல் வெளிநாட்டு வளாகம் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கப்படுகிறது
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் தொடர்பான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அபுதாபி இளவரசர் ஷேக் மொஹம்மத் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே காணொளி காட்சி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பொருளாதாரம், பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே கூட்டு … Read more
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2.5 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா
புதுடெல்லி: உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பி வருகிறது. … Read more
வீடு, வீடாக தேடிச்சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் : அதிமுகவினர் இருவர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமித்ரா வெங்கடேசனின் ஆதரவாளர்கள் நேற்று வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகள் வழங்கினர். தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ம பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை வழங்கி வந்த பாரி, ராகுல் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க மூக்குத்திகளை பறிமுதல் செய்தனர்.
175 கோடி டோஸ் தடுப்பூசியில் புதிய சாதனை| Dinamalar
புதுடில்லி:நாட்டில், 18 வயது கடந்தோரில் 80 சதவீதம் பேருக்கு, இரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், 36.28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இதுவரை செலுத்திய டோஸ் 175.03 கோடியாக உயர்ந்து உள்ளது. இதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.5 சதவீதம் பேர் முதல் டோஸ் மற்றும் 80 சதவீதம் பேர் இரு … Read more
8 மாத உயர்வை தொட்ட தங்கம் விலை.. இப்போ தங்கம் வாங்கினால் லாபம் கிடைக்குமா..?!
ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறையாத நிலையில் பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்கம் மீது திரும்பியுள்ளனர். தங்கம் விலை உயர இந்தியாவும், சீனாவும் தான் காரணம்.. 2021 நிலைமையைக் கொஞ்சம் பாருங்க..! தங்கம் மீது ஆர்வம் கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் கூடப் பங்குச்சந்தை சரியும் போது கூடுதலான முதலீடு செய்து அதிகம் லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் … Read more
நாடோடிச் சித்திரங்கள்: `சிந்து நதிக்கரையின் கதைகளும் இலக்கியப் பின்னணியும்’ | பகுதி 22
படின்டா – ஹிமாச்சல் பகுதிகளின் குளிர்கால முற்பகல் வேளைகள் ரம்மியமானவை. சூரியனின் வெப்பக் கரங்கள் உடலைத் தீண்டி இதம் தந்துவிடாதா என்ற ஏக்கத்தில் நாங்கள் அனைவரும் ஹர்ப்ரீத்தின் கீரைத் தோட்டத்தில் தேநீருக்காகக் கூடுவது வழக்கம். ஹர்ப்ரீத் புதிதாக மணமுடித்து வந்து சில நாள்களே ஆகியிருந்தன. ஹர்ப்ரீத் தன் தோட்டத்தில் பாலக்கீரை, முள்ளங்கிம் பச்சைப் பட்டாணி பயிரிட்டிருந்தாள். இளம்பச்சை நிற இலைகள்மீது படர்ந்திருந்த பனித்துளிகள் சிதறிவிடாதபடி பக்குவமாக ஒவ்வோர் இலையாகக் கொய்து, அவற்றை அவள் இறுகக் கட்டும் அழகை … Read more
ஒரே நாளில் வாயு தொல்லையை தீர்க்க வேண்டுமா? அருமையான வீட்டு வைத்தியங்கள் இதோ!
வயிற்றில் வாயு சேர்வதை வயிற்றுப் பொருமல் என்கிறோம். இதனை ப்லேடஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது. வாயு என்பது பொதுவாக ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியே பிரியும். வயிற்றில் வாயு தங்கிவிட்டால் அது வயிறை வீங்கச் செய்வதோடு வேறு சில பிரச்சனைகளையும் கொடுக்கும். பொதுவாக நாம் சாப்பிடும்போதும், பேசும்போதும் உடலுக்குள் வாயு நுழைகிறது. அது மட்டுமல்ல பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்கள், உணவை செரிமானம் செய்யும்போது வாயுவை உற்பத்தி செய்கிறது. குளிர்காலத்தில் அதிக உணவை உட்கொள்வதால் வயிற்றில் வாயு … Read more