மத்திய மந்திரி எல்.முருகனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள்- அண்ணாமலை தகவல்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்கை பதிவு செய்தனர். மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. 1 மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு சற்று விறுவிறுப்படைந்தது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆளுங்கட்சியினர் இன்றும் பணப்பட்டுவாடா செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் … Read more

எழுத்துப்பிழையால் தவறு நிகழ்ந்துவிட்டது: கள்ளஓட்டு பதிவானதாக அண்ணாமலை புகார் தெரிவித்த நிலையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்

சென்னை: எழுத்துப்பிழையால் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். கள்ளஓட்டு பதிவானதாக அண்ணாமலை புகார் தெரிவித்த நிலையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கள்ளவாக்கு செலுத்தப்படவில்லை என தேர்தல் அலுவலர், தம்மிடம் தெரிவித்ததாக கூறினார். சற்று நேரத்தில் வாக்களிக்க இருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள்: பிரதமர் புகழாரம்| Dinamalar

புதுடில்லி: தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாசாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர். இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை … Read more

உ.வே.சா, சத்ரபதி சிவாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு..!

புதுடெல்லி, தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில் அவர், ‘தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் … Read more

இந்திய பணக்காரர்கள்: கார், பங்களா, பிரைவேட் ஜெட் இருந்தும்.. மகிழ்ச்சியாக இல்லை..!

இந்திய பொருளாதாரமும், வர்த்தகமும் இந்தக் கொரோனா காலத்தில் எந்த அளவிற்குச் சரிவடைந்து மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும் பணக்காரர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பதை ஹூரன் நிறுவனத்தின் ஆய்வறிக்கை காட்டுகிறது. உலகளவில் பணக்காரர்கள் மற்றும் ஆடம்பர சந்தை குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஹூரன் இந்த முறை இந்திய பணக்காரர்கள் குறித்து ஆய்வு செய்து சூப்பரான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உக்ரைன்-ஐ தொட்டால்.. பெட்ரோல் விலை 120, சன்பிளவர் ஆயில் விலை 200.. இந்திய மக்கள் … Read more

சென்னை: வழக்கம்போல் மந்தம்… காத்தாடும் வாக்குப்பதிவு மையங்கள்! – 1 மணி நிலவரம் என்ன?!

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக, இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 5,794 வாக்கு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 27,800-க்கும் அதிகமான அதிகாரிகளும், 18,000 அதிகமான காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். வாக்குப்பதிவு மையம் மொத்தமுள்ள 5,794 வாக்குச்சாவடிகளில், 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை … Read more

பிரித்தானியாவில் தங்க விசா ரத்து: ரஷ்யா உட்பட பல நாட்டு முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

பிரித்தானியாவில் முதலீட்டார்களுக்கு வழங்கப்படும் தங்க விசா பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என உள்விவகாரத்துறை செயலர் ப்ரிட்டி படேல் அறிவித்துள்ளார். இந்த தங்க விசா மூலம் பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் பிரித்தானியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த தங்க விசா மூலம் இந்தியா சீனா மற்றும் ரஷ்யா போன்ற பல நாடுகளை சேர்ந்த பல பணக்கார முதலீட்டாளர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் சொத்துக்கள் ஆகியவற்றை வாங்கி வந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவு; சென்னையில் 17.88%

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் 17.88% அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் சென்னை உள்பட  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சென்னை உள்பட … Read more

நவீன இந்தியாவின் வரலாற்றை ராகுல் காந்தி படிக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

கோண்டா: உத்தர பிரதேச மாநிலம் கோண்டா நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது: நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சீனாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்டதாக அவர் ( ராகுல் காந்தி) கூறினார். அவர் பண்டைய இந்தியாவின் வரலாற்றை படிக்கவில்லை, குறைந்தபட்சம் நவீன இந்தியாவின் வரலாற்றையாவது படிக்க வேண்டும். சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு பகுதியை  பாகிஸ்தான், சீனாவிடம் ஒப்படைத்த போது  ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்.  … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. காலை 9 மணிக்கு 3.96 சதவீதம், 11 மணிக்கு 17.88 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் 1 மணிக்கு 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. காலை முதல் மந்தமான வாக்குகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.