ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?- ரோகித் சர்மா விளக்கம்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் இடம் பிடித்திருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது சிலரை முனுமுனுக்க வைத்தது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் … Read more

பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெங்களூரு விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் மகா காந்தி என்பவரை பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி, மேலாளர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்தியாவில் மாஸ்-ஆ களமிறங்கிய மாஸா.. எப்படி தெரியுமா?

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே நமது ஊர்களில் ஆங்காங்கே சிறு கடைகள் முளைத்து விடும். பழக்கடைகள், ஜூஸ் கடைகள், வெயிலை தணிக்கும் மோர், கூழ் இப்படி ஏராளமானவற்றை பார்க்கலாம். இப்படி ஏராளமானவற்றிற்கும் மத்தியில் மாஸா, கோகா கோலா என பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஜூஸ் வகைகளும் களை கட்டும். வியாபாராம் கல்லா கட்டும். இப்படி மக்கள் விரும்பி குடிக்கும் குளிர்பானங்கள் என்னென்ன? குறிப்பாக இந்தியர்கள் அதிகம் விரும்பும் பானம் எது? அதன் விற்பனை எப்படி? வாருங்கள் பார்க்கலாம். அசைக்க … Read more

காரைக்குடி: தொழிற்பயிற்சி நிறுவன ஆசிரியருக்கு கத்திக்குத்து: மாணவர் கைது! – நடந்தது என்ன?

காரைக்குடி அமராவதிப்புதூரில் அரசு ஐ.டி.ஐ உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இயந்திரவியல் பிரிவில் ஓவிய ஆசிரியராக அரியக்குடியைச் சேர்ந்த ராஜா ஆனந்த் என்பவர் (48) பணியாற்றி வருகிறார். கடந்த 8-ம் தேதி ஓவிய வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, 18 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையில் செல்போன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். அதைக் கண்ட ஆசிரியர் ராஜா ஆனந்த், அவனைக் கண்டித்ததுடன் செல்போனை பறித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியருடன் தகராறில் … Read more

ஒரே நேரத்தில் 20 கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு! பெண்ணொருவர் கொடுத்த புகாரையடுத்து பொலிஸ் அதிரடி

தமிழகத்தின் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 20 பேர் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை சாதிப்பெயரை சொல்லி அங்கிருந்த தீட்சிதர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை … Read more

கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கிய மோடி : பிரியங்கா காந்தி கடும் தாக்கு

பதான்கோட் மோடி ஏற்கனவே கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி உள்ளார் எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.   தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் நிலையில் பாஜக இங்கு ஆட்சியைப் பிடிக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.   பாஜகவுக்காகப் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் என பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்காக … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது- நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ந்தேதி) நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட பின்னர், பிரசாரம் விறுவிறுப்படைந்தது. வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். அதிகாலை முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது மக்களை சந்தித்து ஓட்டு … Read more

லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டம் ரத்து: தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை: அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து தேசிய நிறுவன தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

அசைக்க முடியாத சீன நிறுவனங்கள்.. 2 வருடத்தில் மொத்தமும் மாறியது..! #Xiaomi

இந்திய சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு மோடி அரசு சீனாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. குறிப்பாக முதலீட்டுக்குத் தடை, சீன செயலிகளுக்குத் தடை, சீன உற்பத்தி நிறுவனங்கள் கண்காணிப்பு எனப் பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்திய சீனா எல்லையில் இருநாட்டு ராணுவத்திற்கு மத்தியில் நடந்த தாக்குதலின் போது கூட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சியோமி தனது MI பிராண்டை மேக் இன் இந்தியா என்று கூட … Read more

`மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’ தலைப்பில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி… அதிகாரி பணி இடைநீக்கம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று 5 முதல் 8 வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடைபெற்றது. இந்தப் பேச்சு போட்டியில் ‘மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’, ‘வானத்தில் பறக்கும் பறவைகளை மட்டுமே நான் விரும்புகிறேன்’ மற்றும் ‘நான் ஒரு விஞ்ஞானியாக மாறுவேன். ஆனால் அமெரிக்கா செல்ல மாட்டேன்’ என்ற மூன்று தலைப்புகளின் கீழ் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் … Read more