தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 16/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,40,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 85,579 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,35,63,087 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,310பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வெளி மாநிலத்தில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர்.   இதுவரை 34,40,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,956 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 5,374 பேர் … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் திரும்புவது உறுதி படுத்தப்படவில்லை – நேட்டோ தகவல்

பிரஸ்சல்ஸ்: ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தணிக்க அமெரிக்கா உள்பட பல்வேறு கூட்டணி நாடுகள் முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணமில்லை என ரஷியா தெரிவித்தது. ஆனால் உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ராணுவ பயிற்சியை நிறைவு பெற்றதால் உக்ரைன் எல்லையில் உள்ள கிரிமியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் … Read more

முதல் டி20 போட்டி: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்களை மேற்கு இந்திய தீவுகள் அணி எடுத்து இருந்தது. பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சரித்திர உச்சம் தொட்டது விமான எரிபொருள் விலை| Dinamalar

புதுடில்லி:’ஜெட் எரிபொருள் அல்லது ஏ.டி.எப்.,’ என அழைக்கப்படும், விமான எரிபொருள் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதையடுத்து, விமான கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக, நான்கு முறை விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.ஒரு கிலோ லிட்டருக்கு, கிட்டத்தட்ட 5.2 சதவீதம், அதாவது 4,482 ரூபாய் அதிகரித்து, 90 ஆயிரத்து 520 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்கு விலை அதிகரித்தது இல்லை. இந்திய வரலாற்றில் … Read more

டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் கடைசி ஆஃபர்.. எடுத்துக்கிட்டா நல்லது.. இல்லாடி கஷ்டம்..!

இந்தியாவில் டெஸ்லா கார்களை நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மத்திய அரசிடம் எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் சிறப்பு வரிச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து நீண்ட காலமாகப் பல முறை நேரடியாக மற்றும் மறைமுகமாக ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதமான முடிவும் எடுக்கப்படாத நிலையில் மத்திய அரசு தற்போது புதிய சலுகையை அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. … Read more

இன்றைய ராசி பலன் | 17/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

சகோதரியை துடிதுடிக்க ஆணவப் படுகொலை செய்த அண்ணன்! நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு

பாகிஸ்தான் சகோதரியை ஆணவப் படுகொலை செய்த வழக்கிலிருந்து சகோதரனை விடுவித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்தவர் பௌசியா அசீம்(வயது 26), காண்டீல் பலூச் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது சகோதரரான முகமது வாசிம் என்பவர் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்தார். தன்னுடைய இனத்துக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டதாக கூறி முகமது வாசிம், சகோதரியை ஆணவப் படுகொலை செய்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக நடந்த வழக்கில் கடந்த … Read more

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

கொல்கத்தா: மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள மேற்கிந்தியதீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே புவனேஷ் குமார், … Read more

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த பயிற்சியாளர்கள் நியமனம் – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தி்யாவின் விளையாட்டுப் பயிற்சியை வலுப்படுத்தும் முயற்சியாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், இந்திய விளையாட்டுக்கள் ஆணையமும் 398 பயிற்சியாளர்கள் பணியை நீடித்துள்ளன. இது குறித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது: 2024 மற்றும் 2028 ஒலிம்பிக் உட்பட முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் தயார்படுத்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் விளையாட்டு வீரர்களும், சர்வதேச நிலையில் போட்டியிட்டவர்களும், பதக்கம் … Read more

நெட் தேர்வு முடிவு 2 நாளில் வெளியீடு

புதுடெல்லி: கடந்த 2020, 2021ம் ஆண்டு ஜூனில் நடக்க இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் கொரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த தேர்வுகள் ஒன்றாக  கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் 2022 ஜனவரி 5ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த மாதமே தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை  வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை இன்னும் ஒன்று அல்லது … Read more