விருதுநகர் அருகே பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக புகாரில் போலீசார் விசாரணை

விருதுநகர்: செவல்பட்டியில் ரூ.2 லட்சத்திற்கு ஒருவயது பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் தாய் கலைச்செல்வி உட்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அதிக விமானங்கள்

புதுடெல்லி,  உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிட்டு படைகளை குவித்து வரும் ரஷியாவால் உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் களமிறங்க திட்டமிட்டு உள்ளதால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. இந்த பதற்றமான சூழலில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள் வெளியேறுமாறும், மற்றவர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, கல்வி மற்றும் … Read more

கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய ரிலீஃப்.. தலைவர், MD, CEO பதவிகள் விருப்பத்தின் பேரில் நியமிக்கலாம்!

நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை வகிக்க கூடாது. அவற்றை தனித் தனியாக பிரிக்க வேண்டும் என பங்கு சந்தை அமைப்பான செபி முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விதியை பிறப்பித்தது. இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வரவிருந்தன. இந்த நிலையில் செபி நிறுவனங்கள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. முன்னதாக இந்த இரு பதவிகளையும் ஒருவரே … Read more

புதுக்கோட்டை: இளைஞர்களுக்குக் கஞ்சா சப்ளை! – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

புதுக்கோட்டைப் பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்(33). இவர் புதுக்கோட்டை நகராட்சி 23-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான், கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி முன்பு கார்த்திக் என்ற இளைஞர் சிகரெட்டில் கஞ்சாவை இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் இளைஞரைப் பிடித்து விசாரணை … Read more

பிரித்தானியாவில் இனரீதியாக தாக்கப்பட்ட இலங்கை வம்சாவளி சிறுவன்

லண்டனில் வசித்துவரும் 12 வயது இலங்கை வம்சாவளி சிறுவன் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆனபிறகும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்த விரும்புவதால் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனும் அவரது குடும்பத்தினரும் மனம் திறந்துள்ளனர். பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சதி பாலகுரு (Sathi Balaguru). அவர் 2020 ஆக்டொபரில் மேற்கு லண்டனில் உள்ள Pitshanger FC கால்பந்து அணிக்காக ஒன்பது … Read more

இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவு : வெளியாட்கள் வெளியேற உத்தரவு

சென்னை இன்று மாலை  6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அந்தந்த வார்டுகளில் இருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு இடப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்திலுள்ள  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 12,838 வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நடக்கிறது.  இதில் 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மொத்தம் … Read more

அவர் என்னை காலா என்று அழைக்கிறார் – சரண்ஜித் சிங் சன்னி குறித்து கெஜ்ரிவால் புகார்

மொஹாலி: பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மக்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதைத் தடுக்குமாறு அவர் ( பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) வேண்டுகோள் விடுக்கிறார். அவர் என்னை கலா (கருப்பு) என்று அழைக்கிறார்.  … Read more

பிப்-17: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

LIC பங்கு விற்பனை கன்பார்ம் ஆகிடுச்சு.. அடுத்தது IDBI வங்கியா.. மோடி அரசின் அடுத்த திட்டம் என்ன?

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையானது இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக ஐடிபிஐ வங்கியின் (IDBI bank) பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் விர்சுவல் மூலமாக அடுத்த வாரம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விர்சுவல் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. எல்ஐசி IPO.. பங்கு விலை ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம்.. ரெடியாகிகோங்க..! யாரிடம் எவ்வளவு பங்கு? ஐடிபிஐ … Read more

பஞ்சாப்: `தேர்தல் நடத்தை விதிகள்… ரூ.449.55 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!’ -தேர்தல் ஆணையம்

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 20-ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை வெளியிட்ட நாளிலிருந்தே, அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடத்தில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் அளிக்கக்கூடாது, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடங்களைச்சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் பிரசாரம் நடத்த தடை, வாக்கு பதிவு நடைபெறும் இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மட்டுமே அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி போன்ற தேர்தல் நடத்தை விதிகள் பஞ்சாப்பில் அமலில் … Read more