நகர்புற உள்ளாட்சித் தேர்தல்:இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

சென்னை: தமிழகத்தில்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,866,885 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,866,885 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 417,885,540 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 338,396,416 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,604 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனா-வை காப்பி அடிக்கும் முகேஷ் அம்பானி.. ரோபோசோ உடன் ரிலையன்ஸ் கூட்டணி..!

இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து ஷாட் வீடியோ செயலிகளும் ரீடைல் நிறுவனத்திடம் இணைந்து சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கி வருகிறது. ஆம், சீனாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்தை இந்தியாவில் கொண்டு வர முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் முயற்சி செய்து வருகிறது. சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் … Read more

அனைத்தும் நாடகம்., உக்ரைன் எல்லையில் தொடர்ந்து படைகளை குவிக்கும் ரஷ்யா! நேட்டோ குற்றச்சாட்டு

உக்ரைனைச் சுற்றி ரஷ்யா தொடர்ந்து அதன் இராணுவ படைகளை குவித்துவருவதாக நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லைகளில் இருந்து படைகளை மீண்டும் அதன் நிரந்தர தளத்திற்கு திருப்பி அனுப்பி வருவதாகவும், உக்ரைன் உடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா செவ்வாய்க்கிழமை முதல் கூறிவருகிறது. கிரிமியாவிலிருந்து டாங்கிகள், பீரங்கிகளை மற்றும் போர் ஆயுதங்களையும் ரயில் மூலம் வெளியேற்றப்படுவதாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் ரஷ்யா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது. ஆனால், இவை அனைத்துக்கும் நேர்மாறாக உக்ரைனைச் சுற்றி ஒரு பாரிய … Read more

16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: 16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 வழக்கறிஞர்களையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களையும் நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில் பின்வரும் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கிஷோர் … Read more

பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்க்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது – ரோகித் சர்மா கருத்து

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20  போட்டியில் இந்திய அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.  இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் … Read more

முதல் டி20 போட்டி: இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது மேற்கு இந்திய தீவுகள் அணி

கொல்கத்தா: முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு  ரன்களை வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்களை மேற்கு இந்திய தீவுகள் அணி எடுத்தது.  முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அறிமுகம் செய்யப்பட்டார்.

மகிழ்ச்சி!வேகமாக குறைகிறது மூன்றாவது அலை:இனி நிம்மதி பிறக்கும் என நம்பிக்கை| Dinamalar

புதுடில்லி:’நாடு முழுதும் உள்ள, ‘மெட்ரோ’ நகரங்களில் மூன்றாவது அலை பெரும் அளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால், வரவிருக்கும் மாதங்கள் நிம்மதி அளிக்க கூடியதாக இருக்கும்’ என, மரபணு வரிசை பரிசோதனை பிரிவின் மூத்த ஆய்வாளர் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உருமாறிய, ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தொற்று தென் ஆப்ரிக்காவில் துவங்கி, உலகம் முழுதும் பரவியது.கடந்த ஆண்டு டிச., இறுதியில் நம் நாட்டில் மூன்றாவது அலை துவங்கியது. … Read more

பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா.. HDFC வங்கியில் எப்படி தொடங்குவது?

பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது என்றாலே அந்த குடும்பத்தினர், தங்க நகைகள், ஆபரணங்கள், பிக்சட் டெபாசிட் என குழந்தையின் இளம் வயதிலேயே செய்து வைப்பர், வாங்கி வைப்பார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அப்படி இல்லை. பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு என சில அஞ்சலக திட்டங்கள் உள்ளன. எனினும் பெண் குழந்தைகளுக்கு என பிரத்யேகமான ஒரு திட்டம் மட்டும் தான் உள்ளது. அது சுகன்யா சம்ரிதி திட்டம் தான். மத்திய அரசின் … Read more