பழைய வாகனங்களுக்கு பதில் மின்சார வாகனங்கள்: டில்லி அரசு முடிவு| Dinamalar

புதுடில்லி: கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடும் வகையில், தலைநகர் டில்லியில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய வாகனங்களுக்கு பதில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டில்லி அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பயணம் செய்வதற்காக 12 மின்சார வாகனங்களை மாநில பொதுநிர்வாகத்துறை வாங்கி உள்ளது. இது தொடர்பாக அந்த துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், தங்களது ஆயுட்காலத்தை முடிந்த வாகனங்களை கண்டறிந்து, பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான … Read more

பழைய வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற டெல்லி அரசு முடிவு

புதுடெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவின்படி, டெல்லியில் 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்று மாசுபாட்டிற்கு எதிராக போராடும் வகையில்  டெல்லி அரசு,  அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் உள்ள  பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தொடங்கியுள்ளது. டெல்லி அரசின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 12 எலெக்ட்ரிக் … Read more

டிசிஎஸ், ரிலையன்ஸ் கொடுத்த மெகா வாய்ப்பு.. ஒரே வாரத்தில் ரூ.85,000 கோடிக்கு மேல் லாபம்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில் 10ல் 5 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது,85,712.56 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் டிசிஎஸ் டாப் கெயினராகவும், வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாவது கெயினராகவும் உள்ளது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 491.90 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான … Read more

பீர் பார் லைசென்ஸ் ரத்து… துறை மாற்ற நடவடிக்கை; ஆர்யனைக் கைதுசெய்த அதிகாரி சமீருக்கு சிக்கல்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் மகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கப்பலில் கைது செய்யப்பட்டார். ஒரு மாத சிறைக்கு பிறகு ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்யன் கான் கைது விவகாரத்தில் முன்னின்று செயல்பட்டவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. ஆர்யன் கான் கைது சம்பவத்திற்கு பிறகு சமீர் வான்கடேசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் … Read more

சுற்றுலாப் பயணிகளின் தலை மேல் விழுந்த ஹெலிகாப்டர்: வெளியான திகில் வீடியோ காட்சிகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரையில் பொதுமக்கள் சூழ்ந்திருந்த பகுதிக்குள் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சனிக்கிழமை மதியம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மியாமி கடற்கரையில் கூடி பொழுதை கழித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து கொண்டிருந்த பகுதிக்குள் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாக்கியது. Near-miss helicopter crash on Miami beach https://t.co/r2vAQAfw1J pic.twitter.com/0iOlxuWpeQ — … Read more

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார் விக்கி. இப்படம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத படமாக மாறியது. ஏனெனில் இப்படம் மூலம் தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் (Nayanthara) இடையே காதல் … Read more

பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய அணி: உத்தவ் தாக்கரேவுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

மும்பை: தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அதன் ஒரு பகுதியாக அவர் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடாவை சமீபத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் … Read more

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மதியம்1 மணி நிலவரப்படி 35.88% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆற்றில் கார் கவிழ்ந்து கோர விபத்து.. மணமகன் உட்பட 9 பேர் பலியான சோகம்!

கோட்டா, ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து  காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நயாபுரா கல்வெட்டில் இருந்து  கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர … Read more

சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நாட்டில் மிகபெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு வரும் முன்பே இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக வாய்ப்பு என்பார்கள். கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..! எல்ஐசி ஐபிஓ இந்த நிலையில் எல்ஐசி இன்னும் … Read more