“காங்கிரஸில் சேர, பிரசாந்த் கிஷோர் என்னை கிட்டதட்ட 60 முறை சந்தித்தார்!” – சொல்கிறார் சித்து

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கும், அப்போது முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. தற்போது அமரீந்தர் சிங் புதிய கட்சி துவங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சன்னியை அறிவித்துள்ளார் ராகுல் காந்தி. ராகுல் – … Read more

உண்ண மறுத்து பட்டினி கிடந்தார்! லண்டனில் உயிரை மாய்த்து கொண்ட தமிழர்… வெளிவந்த அதிமுக்கிய தகவல்கள்

லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து குறித்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களே அதற்கு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. Wormwood Scrubs சிறையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் திகதி Ketheeswaren Kunarathnam என்ற இலங்கை தமிழர் தனது உயிரை மாய்த்து கொண்டார். இறப்பதற்கு சில நாட்களாக உணவு உண்ண மறுத்து பட்டினியாக இருந்து வந்த அவர் தற்கொலை தொடர்பில் பேசி வந்ததாக … Read more

ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது! கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகா மாநில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில்  இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை கண்டித்து, இந்து மாணாக்கர்களும் போராட்டம் நடத்தினர். இதனால், அனைத்து பள்ளி, … Read more

கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி

மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

கர்நாடக நிலைமை தமிழ்நாட்டுக்கும் வந்துவிட கூடாது : கமல் ஹாசன் எச்சரிக்கை!

சென்னை : மக்கள் நீதி மய்ய தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.

நுாறுநாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி

புதுச்சேரி : புதுச்சேரியில் நுாறு நாள் வேலைத் திட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர், நுாறுநாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 66 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களுக்கு 100 நாட்களுக்கு வேலை … Read more

பழைய பெட்ரோல், டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றும் திட்டம்.. அசத்தும் டெல்லி அரசு..!

இந்தியாவில் பெர்டோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழ்நிலை பாதிப்பது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நிதிநெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் 2070க்குள் இந்தியா நெட் ஜீரோ அளவீட்டை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இந்த நிலையில் தான் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் தற்போது டெல்லி அரசு மிக முக்கியமான மற்றும் அவசியமான திட்டத்தை … Read more

“நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்; தயவு செய்து எழுந்திருங்கள்!” – மோடிக்கு ராகுல் பதில்

“நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது: என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரதமர் மோடி சில கருத்துக்களை முன்வைத்தது அடுத்து ராகுல்காந்தி அவருக்குப் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனது தாத்தா தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர். பிரதமர் மோடி என் தாத்தாவைப் பற்றி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. ராகுல் காந்தி – நாடாளுமன்றம் பிரதமர் … Read more

'உங்களுக்கு அந்த உரிமை கிடையாது' கனேடிய பிரதமர் போட்ட ட்வீட்!

கனடாவில் அரசாங்கத்தின் கோவிட்-19 ஆணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில், கோவிட்-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனடாவில் உள்ள டிரக் ஓட்டுனர்களும், தடுப்பூசி எதிர்ப்பாளர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனேடிய நாடாளுமனர் அவலகத்தைச் சுற்றி வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கனேடிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதனிடையே, நேற்று, … Read more

ஜிஹாப் பிரச்சினை : கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

பெங்களூரு ஜிஹாப்  பிரச்சினை குறித்து கடும் பதட்டம்  நிலவுவதால் கர்நாடகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பு அரசு கல்லூரியில் இஸ்லாம் மாணவிகள் ஜிஹாப், பர்தா,, புர்கா போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெர்வித்தனர்.  இதையொட்டி அரசு ஜிஹாப் அணியத் தடை விதித்தால் இஸ்லாமிய மாணவிகள் 6 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, சிக்மகளூர் பகுதிகளில் ஜிஹாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் … Read more