வங்கிகள் தனியார் மயமா? மத்திய அமைச்சர் பதில்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என, மத்திய அமைச்சர் பகவத் கராத் தெரிவித்தார். பார்லிமென்டில் நேற்று இவர் கூறியதாவது: முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் … Read more

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை- ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து  காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின்  பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை.  … Read more

கோலியை அலட்சியம் செய்தாரா ரோஹித்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் கோலியை கேப்டன் ரோஹித் சர்மா அலட்சியப்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது.  இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.    இப்போட்டியில் முதல்முறையாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றார். கேப்டன் பதவி இல்லாமல் ரோஹித் ஷர்மா தலைமையில் விராட் கோலி … Read more

சென்னையைச் சேர்ந்த எனக்கு சிஎஸ்கே வில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பு  : தினேஷ் கார்த்திக்

சென்னை தாம் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்  என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது . இந்த ஏலத்தில் மூத்த வீரர்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள், கிளாசிக் பவுலர்கள், மாஸான ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இளம் வீரர்கள் என பலர் இந்த ஏலத்தில் தங்கள் பெயரைப் … Read more

மீண்டும் நீட் விலக்கு மசோதா – இன்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம்

சென்னை: தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், அது குறித்து விவாதிக்க கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.  அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை  நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில்  8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை … Read more

காஷ்மீரிகளுக்கு ஆதரவு பதிவு; மன்னிப்பு கோரியது கே.எப்.சி. இந்தியா

புதுடெல்லி, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 1995ம் ஆண்டு முதன்முறையாக கே.எப்.சி. நிறுவனம் தனது உணவு விடுதி ஒன்றை திறந்து இந்திய வர்த்தகத்தில் நுழைந்தது. அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனம் யம்! பிராண்ட்ஸ்.  பீட்சா ஹட் மற்றும் டேக்கோ பெல் ஆகிய பிரபல பிராண்டுகளுக்கும் சொந்தக்காரராக உள்ள இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக கே.எப்.சி. செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கே.எப்.சி. நிறுவனம் 450 மையங்களை இயக்கி வருகிறது.  இந்நிலையில், அந்நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கு ஒன்றில் காஷ்மீர், … Read more

இந்திய வீரரின் கை, கால்களை கட்டிப்போட்டு ஆஸ்திரேலிய வீரர் ரகளை – வெளியான புதிய உண்மை

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் அண்ட்ரூ சைமண்ட்ஸ் ரகளையான சம்பவம் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.  இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான  யுஸ்வேந்திர சஹால் இந்தியா பங்குபெறும் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியவர்களுடன் நேர்காணல் செய்து அந்த போட்டியின் இறுதியில் அதனை பிசிசிஐ  வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கு பெரும் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் ரகளையான சம்பவம் குறித்த தகவலை சைமண்ட்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.   அதாவது கடந்த 2014  ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் … Read more

விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா

சென்னை: விழுப்புரம் விசிக எம்.பி. ரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் இரவிக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது