பிரைம் டைம் பெருமாளு: `கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ' புலம்பும் நடிகை; அல்டிமேட் நபர் வாசித்த புகார்!

`கொஞ்சம் தாமதமாக என்ட்ரி தந்தார் பிரைம் டைம் பெருமாளு. சூடாக லெமன் டீயை நீட்டி விட்டு, ’24 மணி நேரமும் பி.பா. அல்டிமேட் பாத்திட்டிருக்கிறீர்போல, அதுக்காக ரெகுலர் வேலை மறக்கலாமா’ எனக் கேட்டோம்.`நல்லவேளை, அல்டிமேட்’ பத்தி ஞாபகப்படுத்துனீங்க. அதுல இருந்தே தொடங்கிடுறேன்’ என செய்திக்குள் இறங்கினார். அந்தாளுகூட எப்படிம்மா குடும்பம் நடத்துனீங்க‌? பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் வார எவிக்ஷனில் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி, வெளியில் வந்ததும் தாடி பாலாஜியின் … Read more

நீட் விலக்கு தொடர்பாக நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்! நேரடி ஒளிபரப்பு…

சென்னை:  நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில், நாளை (8ந்தேதி) சட்டமன்றபேரவை சிறப்பு கூட்டம் நாளை  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தமிழக மக்கள் காணும் வகையில், நேரலை (நேரடி ஒளிபரப்பு) செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகஅரசு  சட்டமன்றத்தில் நிறைவேற்றி  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 8 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை … Read more

நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை ஒளிபரப்பு: லண்டனில் ஏழு பேர் கைது

ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதை சமைத்து விருந்தினர்களுக்குக் கொடுத்த ஒருவரது முன்மாதிரியைப் பின்பற்றி, நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்த ஒரு கூட்டத்தைச் சேர்ந்த ஏழு பேர் லண்டனில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானைச் சேர்ந்த Mao Sugiyama (23) என்பவர் தனது ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அதை சமைத்து பரிமாற இருப்பதாக விளம்பரம் செய்தார். அதற்காக 800 பவுண்டுகள் கட்டணமும் … Read more

மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்

புதுடெல்லி: இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பாராளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று கூடியதும், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் குறிப்பை வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின், ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், மாலை 4 மணிக்கு மக்களவை கூடியது. … Read more

திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கரூர் : நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பல்வேறு இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது. * கரூர் – அரவக்குறிச்சி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் காந்தி மேரி போட்டியின்றி தேர்வு * ராமநாதபுரம் – அபிராமம் பேரூராட்சி 9வது வார்டு திமுக வேட்பாளர் பாண்டி போட்டியின்றி தேர்வு* திண்டுக்கல் – வேடசந்தூர் தாலுகா எரியோடு பேரூராட்சி 4வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளா ஜீவா போட்டியின்றி தேர்வு * கரூர் மாநகராட்சி … Read more

ஹூண்டாய், கியா-வை எதிர்க்கும் இந்திய மக்கள்.. டிவிட்டரில் டிரென்டிங்..!

காஷ்மீர் ஒற்றுமை தினம் குறித்துக் கியா மற்றும் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் ஹேண்டில் இருந்து ட்வீட் செய்ததை அடுத்து, ‘பாய்காட் ஹூண்டாய்’ பாய்காட் கியாமோட்டார்ஸ்’ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் கியா கார்களை இனி யாரும் வாங்க கூடாது என்றும், பலர் புக்கிங் செய்யப்பட்ட ஹூண்டாய் மற்றும் கியா கார்களைக் கேன்சல் செய்தும், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மற்றும் மஹிந்திரா-வை ஆதரிக்க வேண்டும் என டிவிட்டரில் … Read more

`சுயேச்சையாக போனேன்; மக்கள் நீதி மய்ய வேட்பாளராகி வந்தேன்!' – நாமக்கல் தேர்தல் சுவாரஸ்யம்

தனது வார்டு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது தெரியாமல் வேட்புமனு தாக்கல் செய்யப் போயிருக்கிறார் ஓய்வுபெற்ற பெண் ஆய்வாளர் ஒருவர்; செய்வதறியாது நின்ற அவர் திடீரென்று (வேறு வார்டில்) மக்கள் நீதி மய்ய வேட்பாளராகியிருக்கிறார். இந்த சுவாரஸ்ய சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் ஜெயந்தி தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, பிரதானக் கட்சிகள், சுயேச்சைகள், சமூக ஆர்வலர்கள், லெட்டர் பேடு கட்சிகள் எனப் பல தரப்பும் வேட்பாளர்களை … Read more

பிரான்ஸ் குடியுரிமை பெற நீங்கள் உங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்கவேண்டியிருக்குமா?

சில நாடுகளில் குடியுரிமை கோரும்போது, நீங்கள் உங்கள் முந்தைய அல்லது உங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை தியாகம் செய்யவேண்டியிருக்கும். சமீப காலம் வரை, ஜேர்மனியில் கூட அப்படி ஒரு விதி இருந்தது. பிரான்சில் குடியுரிமை பெற, நீங்கள் உங்கள் முந்தைய அல்லது உங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்கவேண்டியிருக்குமா? நல்ல செய்தி என்னவென்றால், ஒருவர் பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு, அவரது முந்தைய நாட்டின் அல்லது சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதுதான்! பிரான்சில் நீங்கள் … Read more

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவி சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. . டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துனை வேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் (Santishree Dhulipudi Pandit) நியமிக்கப்பட்டுள்ளார். சாந்திஸ்ரீ பண்டிட் இதற்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் … Read more

இந்தியா- இலங்கை வெளியுறவு மந்திரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசப்பட்டது. கடுமையான அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு, இந்தியா 500 மில்லியன் டாலர் கடன் வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2ம் தேதி கையெழுத்திட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக … Read more