போராடும் விவசாயிகள் – மத்திய அரசு இடையே சனிக்கிழமை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சனிக்கிழமை (பிப்.22) சண்டிகரில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இது தொடர்பாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பூர்ண சந்திர கிஷன், விவசாயிகள் தலைவர்கள் ஜக்ஜித் சிங் டல்லேவால், சர்வான் சிங் பாந்தர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிப்.19 தேதியிட்ட அந்த கடிதத்தில், “பிப்ரவரி 14 அன்று சண்டிகரில் … Read more

இந்தியாவுக்கு அமெரிக்கா 21 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய விவகாரத்தில் வெளியுறவுத் துறை கவலை

புதுடெல்லி: இந்தியாவில் ‘வாக்கு சதவீதத்தை அதிகரிக்க’ அமெரிக்க அரசு 21 மில்லியன் டாலர் நிதியளித்ததாகக் கூறப்படும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “நிதியுதவி தொடர்பாக அமெரிக்க அரசு நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட தகவல்களை நாங்கள் பார்த்தோம். இவை மிகவும் கவலையளிக்கின்றன. இது இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றது. தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்கள் இது தொடர்பாக … Read more

“கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது” – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை

பெங்களூரு: “பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளை கடவுளே நினைத்தால்கூட ஒரே இரவில் தீர்க்க முடியாது” என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தக் கருத்தை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். பெங்களூருவில் நீண்டகாலமாக இருந்து வரும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தும், திட்டங்கள் தாமதாமாவது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இது குறித்து கடந்த புதன்கிழமை பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “பெங்களூருவை … Read more

மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: தவுபால் மற்றும் இம்பாலின் கிழக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் உட்பட 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சுரசந்த்பூரின் குகி தேசிய ராணுவத்தை சேர்ந்தவர். மூன்று பேர் தவுபாலில் உள்ள தடைசெய்யப்பட்ட கங்லிபாக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள். … Read more

‘பதவியேற்று ஒரு நாள்தான் ஆகிறது’ – அதிஷி குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் ரேகா பதிலடி

புதுடெல்லி: “நாங்கள் பதவியேற்று ஒரு நாள் தான் ஆகிறது. அதற்குள் அவர்கள் எப்படி கேள்வியெழுப்ப முடியும்.” என்று டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷியின் வாக்குறுதி மீறல் குற்றச்சாட்டுக்கு இன்னாள் முதல்வர் ரேகா குப்தா பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதிய முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லியை காங்கிரஸ் கட்சி 15 ஆண்டுகள் ஆண்டது. ஆம் ஆத்மி கட்சி 13 ஆண்டுகள் ஆண்டது. அதில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்கு பதிலாக, நாங்கள் … Read more

இமயமலைக்கு செல்கிறீர்களா? – பவன் கல்யாணிடம் பிரதமர் மோடி கேள்வி

புதுடெல்லி: டெல்லி முதல்வராக ரேகா குப்தா நேற்று பதவியேற்றார். இவ்விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்த பவன் கல்யாணிடம் சிறிது நேரம் சிரித்து பேசினர். இதுகுறித்து பவன் கல்யாணிடம் பிறகு செய்தியாளர்கள் கேட்டதற்கு, “வேறொன்றும் இல்லை, என்னைப் பார்த்து ‘என்ன பவன் நீங்கள் இமயமலைக்கு செல்லப் போகிறீர்களா?’ என பிரதமர் சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு … Read more

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை அமைத்து 2 வருடம் ஆகியும் பேராசிரியர் நியமிக்கப்படவில்லை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் கடந்த 2022 நவம்பரில் முதன் முறையாக காசி தமிழ் சங்கமம் (கேடிஎஸ்) நடைபெற்றது. இதை தொடங்குவதற்கு முன்பாக சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டு வந்தது. இதனால் கேடிஎஸ் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, வாராணசியில் வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) ஓர் இருக்கை அமைக்கப்படும் என அறிவித்தார். செப்டம்பர் 11, 2021-ல் மத்திய கல்வி துறையின் யூஜிசி, பிஎச்யூவுக்கு முறைப்படி கடிதம் அனுப்பியது. இதற்கு … Read more

21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் நிலையில் பாஜகவின் ஒரே பெண் முதல்வர் ரேகா குப்தா

புதுடெல்லி: கடந்த 1974 ஜூலை 19-ம் தேதி ஹரியானா​வின் ஜுலானா பகுதி​யில் ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை ஜெய் பகவான் ஜிண்​டால், பாரத ஸ்டேட் வங்கி​யில் மேலாளராக பணியாற்றினார். தந்தை​யின் பணி காரணமாக, குடும்பம் டெல்​லிக்கு இடம்பெயர்ந்​தது. டெல்லி பல்கலைக்​கழகத்​தில் பயின்​ற​போது, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்​யார்த்தி பரிஷத்​தில் ரேகா குப்தா இணைந்​தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பணியாற்றினார். பி.காம் முடித்த பிறகு, காஜி​யாபாத் ஐஎம்​ஐஆர்சி கல்லூரி​யில் சட்டம் பயின்று … Read more

ஒரே நேர்கோட்டில் வரும் 7 கோள்கள்… எப்போது, எங்கு பார்க்கலாம்? – அடுத்து 2040இல் தான்

7 Planets Aligning In The Sky: சூரிய குடும்பத்தின் 7 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் வர இருக்கின்றன. அதை எங்கு, எப்போது, எப்படி காணலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

வரும் ஆண்டுகளில் 20 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்

புதுடெல்லி: விமானிகளுக்கு மின்னணு பணியாளர் உரிமம் (இபிஎல்) வழங்கும் பணியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இணைப்பை ஏற்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு விமானப் போக்குவரத்து முதுகெலும்பாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, 157 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள் நம் நாட்டில் இருக்கும். … Read more