போக்சோ குழந்தைகளை காக்கவே தவிர, காதலிக்கும் இளைஞர்களுக்கு அல்ல! – அலகாபாத் உயர்நீதிமன்றம்

போக்சோ சட்டம் என்பது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டதே தவிர, ஒருவரைக்கொருவர் காதலிக்கும் இளைஞர்களுக்கானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், 14 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் காதலித்துள்ளான். இவர்களில் சிறுவன் உயர் வகுப்பைச் சேர்ந்தவராகவும், சிறுமி பட்டியலினத்தை சேர்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோரிடம் இருந்து எதிர்ப்பு வரவே, இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி, கோயிலில் திருமணம் செய்து கொண்டு, 2 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்த சமயத்தில் இவர்களுக்கு, … Read more

”நான் ஓர் இனிமையான தீவிரவாதி” – காலிஸ்தானி விமர்சனத்துக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: “மக்களுக்காக பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டும் நான் ஓர் இனிமையான தீவிரவாதி” என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு கடைசிக்கட்டப் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. இந்நிலையில், “ஆம் ஆத்மியின் மிகப்பெரியத் தலைவரை தீவிரவாதிகளின் வீடுகளில் காணலாம்” என அரவிந்த் கேஜ்ரிவாலை மறைமுகமாகச் சாடியிருந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இதனைத் … Read more

நான் தீவிரவாதியா.. அப்புறம் ஏன் மோடி கைது பண்ணலை?.. கெஜ்ரிவால் கிண்டல்

என்னைத் தீவிரவாதி என்று பாஜகவினர் சொல்கிறார்கள். இது மிகப் பெரிய காமெடி.. நான் தீவிரவாதி என்றால் ஏன் என்னை பிரதமர் விட்டு வைத்திருக்கிறார், கைது பண்ண வேண்டியதுதானே என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார். பஞ்சாப் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. இங்கு வருகிற 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு கெஜ்ரிவால் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: பலரும் சேர்ந்து கொண்டு … Read more

இனி நேபாளத்திலும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை அறிமுகம் <!– இனி நேபாளத்திலும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை… –>

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் யு.பி.ஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை, அண்டை நாடான நேபாளத்திலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இதற்காக, NPCI எனப்படும் இந்திய தேசிய பரிவர்த்தனை வாரியம், நேபாளத்தில் உள்ள Gateway Payments Service மற்றும் Manam Infotech ஆகிய நிறுவனங்களுடன் கைக்கோர்த்துள்ளது. இதன் மூலமாக, நேபாளத்தில் இருப்பவர்களுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 940 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 3,900 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ … Read more

தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

புதுடெல்லி: என்.எஸ்.இ. என்று அழைக்கப்படும் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.  இதுகுறித்து தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி … Read more

கர்நாடகாவில் கல்லூரி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிய தடை: வேலையை ராஜினாமா செய்த பெண் விரிவுரையாளர்

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து பாடம் நடத்தக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியதால் கர்நாடகாவில் விரிவுரையாளர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். துமகூரு நகரில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கில பாடப்பிரிவு விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் சாந்தினி. கடந்த 3 வருடங்களாக இவர் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விரிவுரையாளர் சாந்தினி, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், … Read more

இன்று முதல் அமலுக்கு வந்தது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம்

மத்திய அரசு அமைத்துள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்கான சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு மாநில அளவில் அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உரிமையாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்களை வகுக்க சட்டம் வகை செய்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மத்திய ஜல் சக்தி … Read more

சென்னை பக்தரின் உயில்படி நன்கொடையாக ஏழுமலையானுக்கு ரூ.9.2 கோடி: தேவஸ்தானத்திடம் உறவினர்கள் வழங்கினர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை பக்தர் ரூ.9.2 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.3.2 கோடி பணத்தை ஏழுமலையானுக்கு சேர வேண்டுமென உயில் எழுதி வைத்திருந்தார். டாக்டர் பர்வதம் தற்போது பர்வதம் காலமானதையடுத்து, சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி ரேவதி மற்றும் … Read more

ஹிஜாப் அணிய தடை.. "சுயமரியாதை முக்கியம்".. வேலையைத் தூக்கி எறிந்த பேராசிரியை!

கர்நாடகத்தில் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார் உதவிப் பேராசிரியை ஒருவர். கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் பிரச்சினை வெடித்தது. மாணவ, மாணவியர் போராட்டங்களில் குதித்தனர். இதனால் கல்வி நிறுவன வளாகங்கள் போர்க்களமாகின. இந்த நிலையில், தற்போது கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து ஹிஜாப் விவகாரம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கல்லூரி விரிவுரையாளர் … Read more

அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு <!– அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெ… –>

38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு எஞ்சிய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு Source link